வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சமீபத்தில் கடிதம் மூலமாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்ற பாதுகாப்பு குழு ஆலோசனை நடத்தியுள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு சென்னை பாதுக்காப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் அனைத்து வழக்கறிஞர்களும் பாதுகாப்பு சோதனைகளுக்கு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்களுக்கான உடையுடன், தங்களுடைய அடையாள அட்டையை, கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். வழக்கறிஞர்களின் வாகனங்கள் பரிசோதனைக்கு பின்னர் தான் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications