உன்னைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. குழந்தை மேல சத்தியம்.. ஏமாற்றிய வீரா.. குமுறிய பியூட்டிஷியன்!
காதலித்து ஏமாற்றிய போலீஸ்காரர் மீது இளம்பெண் புகார் அளித்துள்ளார்
சென்னை: "உன்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. இது நம்ம குழந்தை மேல சத்தியம்"ன்னு சொல்லி என்னை வீரா ஏமாற்றிவிட்டார் என்று பியூட்டிஷன் ஒருவர் போலீஸ்காரர் மீது புகார் அளித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரஸ்வதி என்ற 24 வயது இளம்பெண் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
"2017-ம் வருஷம் நான் போலீஸ் வேலையில் சேர முயற்சி செய்தேன்.. அதற்கான உடற்பயிற்சி செய்யும் கிரவுண்டுக்கு போகும்போதுதான் வீரமணியைச் சந்தித்தேன். காதல் வளர்ந்தது.. விரைவில் வீரமணி போலீஸ் வேலைக்கு தேர்வாகிவிட்டார்.. ஆனால், எனக்கு கிடைக்கவில்லை.

பெற்றோர்
நாங்கள் 2 பேரும் சினிமா, பார்க், பீச் என்று பல இடங்களுக்கு சென்றோம்.. 2018-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி, என்னை வீட்டுக்கு வரும்படி வீரமணி சொன்னார். அவருடைய பெற்றோரிடம் என்னை அறிமுகம் செய்து வைப்பதாக சொன்னார்.. அதை நம்பிதான் சென்றேன்.

கல்யாணம்
ஆனால் வீட்டில் யாரும் இல்லை. அதை பற்றி கேட்டதற்கு அம்மாவும் அப்பாவும் கோயிலுக்கு போயிருக்கிறார்கள் என்று வீரமணி கூறினார். அந்த நேரத்தில், என்னை கல்யாணம் செய்துகொள்வதாக தெரிவித்தார்.

வீரமணி
அவரின் அம்மா மீதும் என் மீதும் பிறக்கப்போகும் குழந்தை மீதும் வீரமணி சத்தியம் செய்தார். இதன்பிறகு நாங்கள் அங்கு சந்தோஷமாக இருந்தோம். இதற்கு பிறகு வீரமணி என்னுடன் சரிவரப் பேசவில்லை. அதை பற்றி கேட்டதற்கு கல்யாணத்துக்கு வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை.

புகார்
அதனால் கல்யாணம் செய்ய விரும்பவில்லை என்று சொல்லி, செல்போனில் என் நம்பரையும் பிளாக் செய்துவிட்டார். என்னை காதலித்து, கல்யாணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து ஏமாற்றிய போலீஸ்காரர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications