அண்ணன்’ ஆடிய ஆட்டம் என்ன? ‘என் தலை’ உருள்வதுதான் என்ன? என் சோக கதை இதுவே.. புலம்பும் அமைச்சர்!
சென்னை: தமிழ்நாட்டு கோட்டையில் இப்போது பேசுபொருளாகி இருப்பது அமைச்சர் ஒருவருக்கும் ஆளும் கட்சியின் சீனியரான அண்ணன் ஒருவருக்கும் இடையேயான 'அறிவிக்கப்படாத யுத்தம்'தான்.
'கொள்கை'வாதி அமைச்சர்.. 'கொள்கை'வீச்சாளர் அண்ணன்.. திராவிட சித்தாந்தத்தில் ஊறித் திளைத்தவர்கள்தான் இருவரும். ஆனால் உள்ளூர் அரசியல் என வருகிறபோது யார்தான் அமைதி காப்பார்கள்?

கடந்த சில நாட்களாக அதிமுக, பாஜக உள்ளிட்டவை ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருவது திருச்சி அருகே உள்ள மாவட்டத்து சம்பவம்தான். இந்த மாவட்டத்துக்காரர்கள்தான் அண்ணனும் அமைச்சரும். இருவருமே மேலிட செல்வாக்கானவர்கள்தான். ஆனாலும் அரசியலில் யாருடைய கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதுதான் நிழல் யுத்தம்.
தற்போது முடிந்த களேபரத்தில் உருண்டது 'அமைச்சரின் தலை'. ஆனால் அமைச்சர் தரப்போ ரொம்பவே குமுறிக் கொண்டிருக்கிறதாம்.. அந்த சம்பவத்துக்கும் தமக்கும் ஒரு துளியும் சம்பந்தமே இல்லை. எல்லாமே அண்ணனும் அவரது ஆட்களும்தான் களமாடி களேபரத்தை உருவாக்கியது. ஊருக்கு இளைச்சவன் கதையாக மாவட்ட அமைச்சர் என்பதால் எல்லோரும் என்னை போட்டு வறுத்தெடுக்கிறார்கள். நானும் அவருடன் மல்லுக்கட்ட முடியாது.. மேலிடத்திலும் போட்டுக் கொடுக்க முடியாது... இதை எப்படி யார் கிட்ட சொல்லி புலம்புவது என தெரியலையே என்கிற குமுறல் கோட்டை சுவர்களில் எதிரொலிக்கும் அளவுக்கு கேட்கிறதாம்.
ஆனால் அண்ணன் தரப்போ, எங்களுக்கு எந்நாளும் 'அமைச்சர்' ஒருவர்தான். எங்க அண்ணன்தான். அதற்காக 'இந்த அமைச்சர்' மீது எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்பதெல்லாம் இல்லை. அதே நேரத்தில் எங்க அண்ணனுக்கு எதிராக அவரையும் தலைதூக்கவும் விடமுடியாது.. அது 'இந்த அமைச்சராக' இருந்தாலும் என எகிறுகின்றனர்.
இப்போதை "மேலிட சாலை" கனத்த மவுனத்துடன் நடப்பதை கவனத்தில் வைத்து கொண்டிருக்கிறதாம். சீனியர் அண்ணன் மீது ஏற்கனவே சில பல கோபதாபங்கள் இருக்கிறதாம் மேலிடத்துக்கு.. அவரது விஸ்வரூபம் என்றைக்கும் தங்களுக்கு பேராபத்து என்பதில் மிக மிக கவனமாகவே இருப்பதுதான் மேலிடம் கடைபிடிக்கும் கொள்கை, கோட்பாடு. ஆகையால் என்றைக்கு யாருக்கு எதிராக மேலிடத்து சாட்டை சுழலும் என்பதுதான் மாவட்டத்தின் எதிர்பார்ப்பாகும்!












Click it and Unblock the Notifications