கட்சிகள் நிச்சயம் நோட்டாவுக்கு பயந்தாகனும்.. இத மட்டும் செய்யுங்க போதும்.. முன்னாள் தேர்தல் ஆணையர்
சென்னை: வரும் காலங்களில் அரசியல்கட்சிகள் நோட்டாவுக்கு பயப்படும் நிலை உருவாகும் என்று என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004-2005ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் இவரது தலைமையில்தான் நடைபெற்றது,

தமிழ்நாட்டிற்கு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், தேர்தல் குறித்த சட்டங்கள் அனைத்தும் தெளிவாக உள்ளதாகவும், அதை தற்போதுள்ள தேர்தல் அலுவலர்கள் முறையாகப் பின்பற்றினாலே போதும் என்றார். முதலில் தேர்தல் நடத்திய அதிகாரிக்கே அதிக சிரமம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "அப்போதெல்லாம் தேர்தல்களில் வன்முறை இருந்ததில்லை. தேர்தல்கள் எல்லாம் திருவிழாக்கள் போலவே இருக்கும். ஆனால் இப்போதுதான் தேர்தல்களில் வன்முறை, வெறுப்பு பேச்சு அதிகரித்துள்ளது. இதை நாம் சரி செய்ய வேண்டும்" என்றார்.
மேலும், "அனைத்து கட்சிகளும் நேர்மையானவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். இருப்பினும் அரசியல் கட்சிகள் அதைச் செய்வதில்லை. இதற்காகவே நோட்டாவை அறிமுகப்படுத்தினோம். சமீப காலங்களாகவே நோட்டாவுக்கு கிடைக்கும் வாக்குகள் அதிகரித்துள்ளது, இப்போது அரசியல் கட்சிகளுக்கு நோட்டா மீதான அச்சம் அதிகரித்துள்ளது.
ஒரு தேர்தலில் 33% மேல் நோட்டாவுக்கு வாக்குகள் விழுந்தால், அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கான விதிகளை உருவாக்க வேண்டும். பல்வேறு நாடுகளிலும் இதுபோன்ற விதிகள் உள்ளது. " என்றார்.
பல தொகுதிகளிலும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் நிகழ்வுகள்கூட பல தொகுதிகளில் நடந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் 20 பேர் போட்டியிடும்பட்சத்தில் பெரும்பான்மை இல்லாதவர்கள் எளிதில் வெற்றி பெற முடியும் என்றும் இதைத் தடுக்க குறைந்தபட்சம் 51% or 31% வாக்குகள் வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரலாம் என்றும் அவர் கூறினார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications