சென்னை, கோவை.. பொள்ளாச்சி கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்.. கொந்தளிப்பு
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் நடுவே போராட்டம் விரிவடைந்துள்ளது.
பொள்ளாச்சி, பாலியல் பலாத்கார விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. மேலும் குற்றவாளிகளுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மாநிலம் முழுக்க கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இதனிடையே, போராட்டக் களத்திற்கு மாணவர்களும் வந்துள்ளனர். இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் பெரும் போராட்டம் நடத்தி கைதாகினர்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்க கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வலியுறுத்தியும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
மாணவர்கள் மட்டத்தில் போராட்டம் விரிவடைந்துவிட்டதால், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications