Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதை மட்டும் பண்ணுனா போதும்.. ரூ.1.1 லட்சம் உங்க வங்கி கணக்கை தேடி வரும்.. மோடி அரசின் சூப்பர் மூவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு வழங்கும் தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம் (POMIS) மூலம், முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு ரூ. 1.1 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில், இந்த திட்டம் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு நிதிச்சுமையை குறைக்க உதவும் ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது.

Post savings

தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம் (POMIS)

தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டம் (POMIS) என்பது ஒரு முறை முதலீடு செய்து, அதன் மூலம் மாத வருமானம் பெறும் சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வட்டி, ஒவ்வொரு மாதமும் உங்கள் தபால் நிலைய சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும். இது பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், 5 ஆண்டுகளுக்கு மட்டுமே பணத்தை முதலீடு செய்து வைத்திருக்க முடியும். ஐந்து வருடங்கள் முடிந்த பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் அசல் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது புதிய கணக்கைத் தொடங்கி திட்டத்தை தொடரலாம்.

தனிநபர் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கு என இரண்டு வகையான கணக்குகளைத் திறக்கும் வசதி POMIS திட்டத்தில் உள்ளது. தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மாதம் மாதம் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

யார் இந்த கணக்கைத் தொடங்கலாம்?

இந்தியக் குடியுரிமை பெற்ற எந்தவொரு நபரும், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் (POMIS) கணக்குத் தொடங்கலாம். குறிப்பாக, மேயர் வயது பூர்த்தி அடைந்தவர்கள் கணக்கு தொடங்க தகுதியானவர்கள். மேலும், மைனர்கள் தங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் முன்னிலையில் கணக்கு தொடங்க முடியும்.

கணக்குத் தொடங்க தேவையான ஆவணங்கள்:

தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு
ஆதார் அட்டை
அடையாளச் சான்றுக்கு பான் கார்டு
வருமானத்தை எவ்வாறு கணக்கிடுவது?
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்திற்கான (POMIS) தற்போதைய வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. இந்த வட்டி விகிதத்தின் அடிப்படையில், முதலீட்டாளர்கள் தங்கள் வருமானத்தை கணக்கிடலாம்.

கூட்டுக் கணக்கு உதாரணம்: ஒரு முதலீட்டாளர் ரூ.15 லட்சத்தை கூட்டுக் கணக்கில் டெபாசிட் செய்தால், மாதந்தோறும் சுமார் ரூ.9,250 வருமானம் பெறலாம். இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.1,11,000 வருமானம் கிடைக்கும்.

தனிநபர் கணக்கு உதாரணம்: ஒரு தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்வதன் மூலம், மாதத்திற்கு சுமார் ரூ.5,550 வருமானம் பெற முடியும். இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.66,600 வட்டியாக கிடைக்கும்.

முன்கூட்டியே கணக்கை மூடுவதற்கான விதிமுறைகள்

POMIS கணக்கை ஓராண்டு நிறைவடைவதற்கு முன்பு மூட முடியாது. ஒருவேளை, முதலீட்டாளர் ஒரு வருடம் கழித்து, ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை மூடினால், 2% விலக்கு (deduction) பொருந்தும். அதேபோல், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணக்கை மூடினால், 1% விலக்கு அளிக்கப்படும்.

கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கான வழிமுறை: கணக்கை முன்கூட்டியே மூட விரும்பினால், பாஸ்புக்குடன் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள், மாத வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான விருப்பமாக உள்ளது. குறிப்பாக, POMIS திட்டம் நிலையான வருமானத்தை உறுதி செய்வதோடு, பாதுகாப்பான முதலீட்டிற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+