பொங்கல் 2026.. பெங்களூரில் இருந்து கோவை போத்தனூர் வழியாக கொல்லம், கண்ணூருக்கு சிறப்பு ரயில்
கோவை: பொங்கல் பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை போத்தனூர் வழியாக கொல்லம், கண்ணூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வருகிற 13-ந் தேதி இரவு 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரயில் மறுநாள் மாலை 4 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
கோவை வழியாக கேரளாவிற்கு பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, மற்றும் பெங்களூருவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் கோவை வழியாக கேரளாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 13-ந் தேதி இரவு 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு-கொல்லம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06219) மறுநாள் மாலை 4 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம்-பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06220) மறுநாள் காலை 10.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும்.இந்த ரயிலானது காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதுபோன்று பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி 13-ந் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் பெங்களூரு-கண்ணூர் சிறப்பு ரயில் (எண்:06577) மறுநாள் காலை 7.50 மணிக்கு கண்ணூர் நிலையத்தை சென்றடையும்.
மறு மார்க்கமாக 14-ந் தேதி காலை 11.30 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் கண்ணூர்- பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06578) மறுநாள் காலை 4.10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரெயிலானது தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரிசூர், சொரணூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications