அடுத்த சரவெடி.. டோக்கன் ரெடி? பொங்கல் பரிசு பொருள் வழங்க கூடுதல் ஊழியர்கள்: கூட்டுறவு துறை பதிவாளர்
சென்னை: ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ''பொங்கல் பரிசு பொருள் வழங்கும் ரேஷன் கடைகளில் தேவையெனில் போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற வேண்டும்'' என கூட்டுறவு துறை பதிவாளர் சுப்பையன் அறிவுறுத்தியுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.. பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசு தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டோக்கன்கள்: அதன்படி ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் முற்பகல் 100 பேருக்கும் பிற்பகலில் 100 பேருக்கும் டோக்கன் வழங்கவும், இரண்டாம் நாள் முதல் முற்பகல் 200 பேருக்கும் பிற்பகலில் 200 பேருக்கும் டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தல்களை தமிழக அரசு கொடுத்துள்ளது.
இந்நிலையில், கூட்டுறவு இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை பதிவாளர் சுப்பையன் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.. அந்த சுற்றறிக்கையில், "பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வரும் 9ம் தேதி முதல், முறையாக தெரு வாரியாக பிரிக்கப்பட்டு வழங்க வேண்டும்.
போலீஸ் பாதுகாப்பு: பொருள் பெறும் நாள், விவரம் இருக்க வேண்டும். முதல் நாள் காலை மற்றும் பிற்பகல் தலா 100 பேர்; 2வது நாள் முதல் காலை 150, பிற்பகல் 200 பேர் என பொருள் வழங்குவதோடு, அதன் விவரம் கடை முன் வைக்கப்பட வேண்டும். மேலும் 1500 கார்டுக்கு மேல் உள்ள கடைகளுக்கு கூடுதல் ஊழியர் பெற்றுக் கொள்ளவேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடிய இடங்கள், கூட்ட நெரிசல் ஏற்படும் கடைகளுக்கு உரிய வகையில் போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற வேண்டும்.
அனைத்து கடைகளிலும் போதிய அளவு பொங்கல் பரிசுப் பொருட்கள் இருப்பில் இருப்பதையும், தரமானதாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். டோக்கன் வினியோகம் குறித்த தகவல் தினமும் மாலை 5:00 மணிக்குள் அளிக்கப்பட வேண்டும். எந்த புகாருக்கும் இடம் தராத வகையில் இப்பணிகள் செய்து முடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கோரிக்கை: இதனிடையே ரேஷன் ஊழியர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்திருக்கிறார்கள்.. அதன்படி, ''தமிழகத்தில் கடந்த காலங்களில் பொங்கல் பரிசு வழங்கும்போது பல்வேறு பிரச்சனைகள், நடைமுறை சிக்கல்கள் எழுந்தன.. எனவே, இந்த முறை அவைகளை தவிர்க்கும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பை மாதம் முழுவதும், அனைத்து வேலை நாட்களிலும் வழங்கலாம் என்று அறிவிப்பு வைக்க அனுமதிக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications