இரும்பு ராடால் அடித்து பன்றி இறைச்சி பக்கோடா கடைக்காரர் கொலை... பல்லாவரத்தில் பரபரப்பு
சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே பன்றி இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்தவரை, மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லாவரம் அருகே உள்ள நாகல்பேணி ஆதம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் மகன், மகள் உள்ளனர். சீனிவாசன் திருநீர்மலை நாகல்கேணி சாலையில் பன்றி இறைச்சி பக்கோடா கடை நடத்தி வந்தார்.

கடையை நடத்தி முடித்து விட்டு, நேற்று நள்ளிரவில் வீடு திரும்பிய இவரை வீட்டருகே துரத்தி வந்த மர்ம கும்பல், இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பன்றிகளை வளர்ப்பவர்களுக்கு, தெரியாமல் சீனிவாசன் பன்றிகளை பிடித்ததால் ஏற்பட்ட முன் விரோதத்தில் திருநீர்மலை பகுதியை சேர்ந்த பன்றி வியாபாரிகள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications