ஜெனரல் பவர் பத்திரம்.. பவர் மூலம் சொத்து வாங்கறீங்களா? பொது அதிகார பத்திரத்தில் இதெல்லாம் முக்கியம்
சென்னை: பவர் பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா? அதற்கான விதிமுறைகள், அதிகாரங்கள் என்னென்ன? தெரியுமா?
பொது அதிகார பத்திரம் என்பது, சம்பந்தப்பட்ட அதன் முகவராக உள்ளவருக்கு சம்பந்தப்பட்ட சொத்தை விற்கவும், நிலத்தை மனைப்பிரிவுகளாக ஆக்கவும், அரசு அலுவலகங்களில் சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பம் இடவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்..

பவர் பத்திரங்கள்: அதாவது, ஒரு வீடு அல்லது நிலத்தின் உரிமையாளர், தன்னால் செயல்படுத்த முடியாத அல்லது சரியாக பராமரிக்க முடியாத சொத்துக்களை, இன்னொருவருக்கு எழுதி கொடுக்கும் அதிகாரம்தான், பவர் பத்திரம் ஆகும். நம்முடைய நிலத்தை இன்னொருவர் வந்து ஆக்கிரமிப்பு செய்யும்போது, இந்த பவர் பத்திரம் தேவைப்படும்.
பவர் பத்திரம் எழுதி தருபவர்களை முதன்மையாளர் என்றும், பவர் பத்திரம் பெறப்படுபவரை முகவர் என்றும் சொல்வார்கள்.. ஆனால், முதன்மையாளர், தன்னுடைய முகவருக்கு சில குறிப்பிட்ட அதிகாரங்களை தன் சார்பாக செயல்பட வழங்க முடியும்..
முதன்மையாளர் மட்டுமே பவர் பத்திரத்தில் கையெழுத்திடுவது அவசியமாக இருந்த நிலையில், தற்போதெல்லாம் பவர் பத்திரத்தில் முதன்மையாளர் கையெழுத்துடன் சேர்த்து, அவர் நியமிக்கும் முகவரும் கையெழுத்திடுவது அவசியமாம்.
அதிகாரங்கள்: பொது அதிகார பத்திரம் (General Power Of Attorney) தனி அதிகார பத்திரம் (Limited Power Of Attorney) என்று இதில் 2 வகைகள் உள்ளன.. பொது அதிகார பத்திரம் என்பது அதன் முகவராக உள்ளவருக்கு சம்பந்தப்பட்ட சொத்தை விற்கவும், நிலத்தை மனைப்பிரிவுகளாக ஆக்கவும், அரசு அலுவலகங்களில் சொத்து சம்பந்தமான ஆவணங்களில் கையொப்பம் இடவும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்
ஆனால், தனி அதிகார பத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு மட்டும் அதிகாரம் தரப்பட்டிருக்கும். அதாவது, சொத்தை விற்பது அல்லது நிலத்தை மனைப்பிரிவுகளாக பிரிப்பது போன்ற குறிப்பிட்ட செயலை தவிர வேறு எதையும் அவர் மேற்கொள்ள இயலாது.
அதேபோல, பவர் பத்திரத்தில், ஏதேனும் காலத்தை குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லுபடியாகும்.. ஆனால், முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும்..
கிரையம்: நீங்கள் அதிகாரம் கொடுக்கும் முகவர், உங்கள் நிலத்தை வேறு யாருக்காவது கிரையம் செய்திருந்தாலோ அல்லது கிரையம் செய்வதற்கான வேலையில் இறங்கியிருந்தாலோ, அந்த பவர் பத்திரத்தை முதன்மையானவர் எளிதாக ரத்து செய்துவிடலாம்.
சொத்தின் உரிமையாளர் அல்லது பவர் ஆப் அட்டர்னி மூலம் மட்டுமே அதிகார பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான நகல் வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் பவர் ரத்து செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை நம்மால் அறிந்து கொள்ளமுடியும்.
பதிவுத்துறை : காரணம், 2009 நவம்பர்-1 முதல் அதிகார பத்திரம் பதிவு செய்வதற்கான புதிய முறைகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிகார பத்திரம் தமிழகத்தில் எந்த சார்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சொத்து அமைந்துள்ள சார்பதிவு அலுவலகத்துக்கு அதன் விவரங்கள் அனுப்பப்படும்.
ஆனால், 2009 நவம்பர், 1ம் தேதிக்கு முன்பு, பதிவான பவர் பத்திரம் குறித்த விவரங்கள் வில்லங்க சான்றிதழில் இருக்காது. அதனால், பவர் பெற்றவரிடம் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் சமயத்தில் அது முறையாக ரத்து செய்யப்பட்டிருப்பதை அறிந்து கொள்வது அவசியம்.
ஆவணங்கள்: இது எல்லாவற்றையும்விட முக்கியமானது, சொத்துக்களை பதிவு செய்யும்போது சில அடிப்படையான விஷயங்களை உற்று கவனிக்க வேண்டும்.. குறிப்பாக, எப்போதுமே எந்த ஒரு பத்திரம் வாங்கினாலும், அதற்குரிய ஆவணங்கள் இருக்கிறதா, அந்த ஆவணங்கள் அனைத்துமே முறையாக இருக்கிறதா என்பதை படித்து பார்த்துதான் கையெழுத்து போட வேண்டும்.
சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட சொத்துக்களை அந்தந்த சார்பதிவாளர்களிடமே தாக்கல் செய்யலாம் அல்லது அந்த சார்பதிவாளர் எந்த மாவட்ட பதிவாளரின் கீழ் பணியாற்றுகிறாரோ, அந்த மாவட்ட பதிவாளரிடம் பதிவு ஆவணத்தை தாக்கல் செய்யலாம். பதிவுத்துறை அலுவலகத்துக்கு செல்லும்போது, சில முக்கிய ஆவணங்களை கையோடு எடுத்து செல்ல வேண்டும்.
அசல் ஆவணம்: உதாரணத்துக்கு, தயாரிக்கப்பட்ட ஆவணம் அதாவது தன்னுடைய சொத்தை விற்பவரால் எழுதிக் கொடுக்கப்படும் அசல் ஆவணம் இருக்க வேண்டும்.. பட்டா மாற்றம் செய்வதற்கான விண்ணப்பம் மற்றும் அதற்கான நீதிமன்ற வில்லை தேவைப்படும்.. வீடு என்றால் விற்பவர், எழுதிக்காடுப்பவர் பெயரில் உள்ள சொத்துவரி போன்ற விவரங்கள் அவசியமாக தேவைப்படும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications