Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி.. ஆனா உண்மையில மெழுகுவர்த்தி! புழுங்கும் புஸ்ஸி ஆனந்த்! தவெகவில் தனிமரமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் தனிக்காட்டு ராஜாவாக வளம் வந்த புஸ்ஸி ஆனந்த் கடந்த சில வாரங்களாகவே கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டையன் வந்த பிறகு கட்சியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதோ என புஸ்ஸி ஆனந்த் புலம்புவதாக சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். செங்கோட்டையன் இணையும் போது ஆதவ் அர்ஜுனாவை அருகில் அழைத்த விஜய் ஆனந்தை கண்டு கொள்ளவில்லை எனவும் கூறுகின்றனர்

நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். விஜயின் அரசியல் ஆசை இன்று நேற்று வந்ததில்லை. பல ஆண்டுகாலமாகவே அது திட்டமிட்ட நடந்ததுதான். ஆரம்பத்தில் தன்னை நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள ரஜினிகாந்தை, ரெஃபரன்ஸாக பயன்படுத்தினார் விஜய்.

அரசியல் ஆசை வந்ததும் எம்ஜிஆரை பிரதானப்படுத்த தொடங்கினார். வசீகரா படத்தில் விஜயுடன் எம்ஜிஆர் பேசுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு எம்ஜிஆர் பாடலுக்கு நடனமாடுவது, விஜய் நடந்து வரும்போது பின்னணியில் எம்ஜிஆர் பாடல்கள் ஒலிப்பது என விஜய் தனது அரசியல் ஆசையை காட்டிக் கொண்டார்.

Power Shift in TVK bussy anand Upset as Sengottaiyan

தவெக அரசியல்

தொடர்ந்து ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. அப்போது வரை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான் எல்லாமே. அதற்கு பிறகு புஸ்ஸி ஆனந்த் வந்ததும் நிலைமை தலைகீழானது. முழுக்க முழுக்க அரசியல் பயணத்தை நோக்கிய விஜய் மக்கள் இயக்கம் பயணித்தது. அதன் விளைவாக சந்திரசேகர் விஜய் இடையே இடைவெளி விழுந்தது. அதற்கு புஸ்ஸி ஆனந்து தான் காரணம் எனவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி தமிழக வெற்றிக் கழகம் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

புஸ்ஸி ஆனந்த்

பிப்ரவரி மாதமே கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபரில் முதல் மாநில மாநாடு மூலம் அதிகாரப்பூர்வ அரசியலுக்கு வந்தார் விஜய். அதற்கு பிறகு இரண்டு மாநில மாநாடுகள் முடிவடைந்து விட்டது. அப்போது வரை விஜய் உடன் புஸ்ஸி ஆனந்த் மட்டும் தான் இருந்தார். அவரை தவிர வேறு யாரையும் தமிழக வெற்றிக் கழகத்தில் தமிழக மக்களுக்கு தெரியாது. இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் விஜய்க்கு அடுத்த இடத்தில் புஸ்ஸி ஆனந்த் இருந்தார்.

தலைமை போட்டி

ஆனால் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ்ம், இப்போது செங்கோட்டையன் என இரண்டாம் இடத்தை பிடிக்க பல தலைகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்குப் பிறகு அருண்ராஜ் வந்த போதும் அவர்கள் தனித்து ஊடகங்களில் பேசத் தொடங்கினர். ஆனால் ஊடகங்களை எதிர்கொள்ளத் தெரியாத ஆனந்த் இதனால் கடும் அதிருப்தி அடைந்தார். உச்சபட்சமாக செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த போது விஜய் தனக்கு அருகே வந்து நிற்குமாறு ஆதவ் அர்ஜுனாவை அழைத்தார். ஆனால் அவருக்கு மிக அருகில் நின்ற ஆனந்தை அழைக்கவில்லை. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டதையும் கவனிக்க வேண்டும்.

கொங்கு மண்டலம்

இதற்கிடையே சமீபமாக சமூக வலைதளங்களில் ஆனந்தை கொண்டாடி வந்த, கொங்கு மண்டல தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் தற்போது செங்கோட்டையன் பக்கம் தாவி விட்டனர். நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டு இருப்பதால் ஏற்கனவே பதவி பெற்றவர்களும் இனி பதவி பெற வேண்டும் என நினைப்பவர்களும் செங்கோட்டையனின் அலுவலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் வரை மாற்றி மாற்றி தினமும் தனக்கு போன் செய்த தொண்டர்கள் தற்போது கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கத்தில் ஆனந்த் இருக்கிறார் என்கிறார்கள் கொங்கு மண்டல நண்பா, நண்பீஸ்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+