மறுபடியும் பி.ஆர். நடராஜனா.. சோர்வில் திமுக.. சலசலப்பில் கூட்டணி
சென்னை: கோவையில் மீண்டும் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுவதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம்.
கோவை லோக்சபா தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்படுள்ள பி.ஆர்.நடராஜன் ஏற்கனவே கோவை தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். கடந்த தேர்தலில் அவர் தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது மார்க்சிஸ்ட் தலைமை.

கோவை தொகுதியை சி.பி.எம்.க்கு திமுக ஒதுக்கியதால், புதுமுகமாக கே. பாலகிருஷ்ணன் களம் இறங்குவார் என எதிர்பார்த்திருந்தனர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர். ஆனால் அதற்கு நேர்மாறாக மீண்டும் பி.ஆர்.நடராஜனையே களத்தில் இறக்கி விட்டுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை.
கோவையை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்த போது, நடராஜன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகதவர், எளிமையானவர், அனைவரும் எளிதில் அணுகக்கூடியவர். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் மக்கள் மத்தியில் பிரபலம் இல்லாததும், செலவுக்கு தயங்குவதும் பி.ஆர்.நடராஜனுக்கு மைனஸாக அமைகிறது. மேலும் பி.ஆர்.நடராஜனுக்கு வயதாகிவிட்டதால் தொகுதி முழுவதும் அவர் சுற்றி வருவாரா என்பதை, என்னைப்போல் பலருக்கும் யோசனை செய்கின்றனர் என்றார் அவர்.
சுமப்பது என முடிவாகிடுச்சு, தலையில் என்ன இடையில் என்ன சுமக்க வேண்டியது தான் எனக் கூறி சிரிக்கின்றனர் கோவை திமுகவினர். ஜெயிக்க வச்சுருவாங்களா!












Click it and Unblock the Notifications