பிரபாகரன் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு- 16 ஆண்டுகளுக்கு பின் விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக 'விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரபாகரன் மரணம் குறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரில் அறிக்கை வெளியாகி இருக்கிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை: உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே! எமது விடுதனை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந்தலைவருமான பிரபாகரன், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதி தளராது 36 ஆண்டுகளாக எதிரிப் படைகளோடு அடிபணியாது போராடி நந்திக் கடலோரம் நடைபெற்ற இறுதிச் சமரில் வீரகாவியமானார்.

இலங்கை அரசுக்கும் அதன் ராணுவ இயந்திரத்துக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சித் திட்டங்களையும் எதிர்கொண்டு அனைத்து தடைகளையும் தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக பிரபாகரன் திகழ்கின்றார்.

தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது.
பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயரமிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும் ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு, சிதைந்து கொண்டிருந்த ஈழத் தமிழினத்துக்கு கிடைத்த ஒரு சூரியத் தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து தமிழினத்தின் அதி உச்சவீர அடையாளமாக பிரபாகரன் திகழ்கிறார்.
எமது அன்பிற்குரிய தாய்த் தமிழ் உறவுகளே!
தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்தில் இருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குகள் உடைத்து கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதி தளராது போராடிய பிரபாகரன், மாவீரர் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தமிழினத்தின் விடிவுக்காக, தமது உயிரை அர்ப்பணித்த எமது தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு நெஞ்சங்களில் இருத்தி, தமிழீழப் போராட்ட வரலாற்றின் மிகப் பெரும் அடையாளமாக எமது இதயக் கோவில்களில் வைத்து பூசிக்கப்படக் கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது மிகப் பெரும் கடமையும் பொறுப்புமாகும்.

ஆகவே, வரலாற்றில் எமக்குக் கிடைத்த பொக்கிசமான, பிரபாகரனுக்கு அவரது வழியில் களமாடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம் பெயர் தாயக மற்றும் தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பு எங்கும், நடத்துகிற அதேவேளையில் அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடு ஒன்றில் 2025-ம் ஆண்டு நடுப்பகுதியில், உலகம் போற்றும் பேரெழுச்சியாக முன்னெடுக்க இருக்கிறோம்.
எங்கள் பெருந்தலைவர் பிரபாகரனால் கட்டமைத்து வளர்க்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக் கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோம் என பிரபாகரன் மீது மாவீரர்கள் மீதும் உறுதி எடுத்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications