பிரதான் மந்திரி இ பஸ் சேவை.. தமிழகத்தில் "டிக்" ஆன 11 மேஜர் நகரங்கள்.. மத்திய அரசு தந்த வரப்பிரசாதம்
சென்னை: தமிழக போக்குவரத்து துறை பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டுவரும் நிலையில், மத்திய அரசும் இன்னொரு குட்நியூஸ் சொல்லி உள்ளது. அதன்படி, மத்திய அரசின் எலக்ட்ரிக் பஸ் எனப்படும் மின்சார பஸ்களை இயக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், பிரதம மந்திரி இ-பஸ் சேவை திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
எலக்ட்ரிக் பஸ்கள்: அந்தவகையில், எலக்ட்ரிக் பஸ்கள் எனப்படும் மின்சாரத்தால் இயங்கும் இ-பஸ்களை நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் "பிரதான்மந்திரி இ-பஸ் சேவை" திட்டத்திற்கு ஒப்புதலும் தரப்பட்டு, ரூ.57 ஆயிரம் 613 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இதையடுத்து, 10 ஆயிரம் எலக்ட்ரிக் ஏசி பஸ்களை பல்வேறு நகரங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 2 முக்கியமான அம்சங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.. ஒன்று, டவுன் பஸ் சேவையை விரிவுபடுத்துவது, மற்றொன்று சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை நகர்ப்புற சேவையை அளிப்பது.
இதனால், நாம் நாட்டில் பொது போக்குவரத்தின் பயன்பாட்டை வெகுவாக அதிகரிக்கும் என்பதுடன், பருவநிலை மாறுபாட்டிற்கு எதிரான தேசத்தின் பாதையும் முக்கியத்துவம் பெறும் என்று நம்பப்படுகிறது.
பிரதான் மந்திரி: இந்த பிரதம மந்திரியின் இ-பஸ் சேவை திட்டமானது, 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் அமல்படுத்தப்பட உள்ளதாகவும், முக்கியமாக வரைமுறை செய்யப்படாத பஸ் சேவைகள் இருக்கும் மாநகரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது..
இதில், முதற்கட்டமாக இ-பஸ்கள் இயக்க தகுதியான 169 மாநகரங்களை 4 பிரிவாக தேர்வு செய்து மத்திய அரசு லிஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு மாநிலங்களில், தனியார் பங்களிப்புடன் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த போகிறது. இதில் நம்முடைய தமிழகமும் அடக்கமாகும்.. திருச்சி உள்பட 11 நகரங்களில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த மத்தியஅரசு தேர்வு செய்துள்ளது,..
இ-பஸ்கள்: தமிழகத்தில் 150 இ-பஸ்கள் இயக்க 20 லட்சம் முதல் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் கோவை மாநகரமும், 100 இ-பஸ்கள் இயக்க 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் திருச்சி, மதுரை மாநகரங்களும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் ஈரோடு, சேலம், திருப்பூர் மாநகரங்களும் இடம்பெற்றுள்ளன.

அடுத்தபடியாக 5 லட்சம் மற்றும் அதற்கு கீழ் மக்கள் தொகை கொண்ட மாநகரங்கள் பட்டியலில் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் நகரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்திற்கு ஸ்டாண்டர்டு, மிடில், மினி என 3 பிரிவுகளில் கிலோ மீட்டர் அடிப்படையில் மத்திய அரசு நிதி வழங்க போகிறது.. அநேகமாக இந்த திட்டம் அடுத்த 10 வருங்களுக்குள் அல்லது 2037ம் ஆண்டு வரை மார்ச் மாதம் வரை பயன்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி: ஆக, தமிழகத்தில் மொத்தம் 11 நகரங்களில் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம் -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
39 நாளில் டேவிட்சன் மாற்றம்! புதிய டிஜிபியான சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்! சந்தீப் மிட்டல் யார்? -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications