சீறும் தெலுங்கர்கள்! அமித் ஷாவிற்கு செருப்பு எடுத்து தந்த பாஜக தலைவர்! பிரகாஷ் ராஜுக்கு வந்ததே கோபம்
சென்னை: தெலுங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் எம்பி அமைச்சர் அமித் ஷாவிற்கு செருப்பு எடுத்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் உள்ள முனுகுடுவில் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஹைதராபாத் சென்று இருந்தார். செகந்திராபாத்தில் உள்ள கோவில் ஒன்றில் அமித் ஷா வழிபாடு நடத்தினார்.
அதன்பின் வெளியே வந்த அமித் ஷா மெதுவாக நடந்து கொண்டு இருந்தார். அவர் வெளியே செருப்பை விட்டு இருந்த நிலையில் தெலுங்கானா பாஜக தலைவர் எம்பி பந்தி சஞ்சய் வேகமாக ஓடிப்போய் அந்த செருப்பை கையால் எடுத்தார்.

அமித் ஷா
அமித் ஷா மெதுவாக நடந்து வர பந்தி சஞ்சய் வேகமாக ஓடி செருப்பை எடுத்து கொடுத்தார். எதோ அடிமை போல அவர் நடந்து கொண்டனர். வேகமாக ஓடிப்போய் செருப்பை கையில் எடுத்துக்கொண்டு பந்தி சஞ்சய் அமித் ஷா காலுக்கு அருகே வைத்தார். இவரின் செயல் வீடியோவாக வெளியாகி உள்ளது. தெலுங்கானா, ஆந்திரா பிரதேசம் முழுக்க பரவி வருகிறது. அம்மாநில மக்கள் இடையே இந்த வீடியோ கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசிங்கம்
இதை விமர்சனம் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், அந்த நபரை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது. சீ.. சீ.. இப்படித்தான் நீங்கள் தெலுங்கு மக்களின் சுயமரியாதையை காப்பீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் ஒருவரே இப்படி செருப்பை எடுத்துக்கொடுத்ததுதான் சர்ச்சைக்கு காரணம் ஆகி உள்ளது. அவர் இப்படி செய்திருக்க கூடாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கானா பிரைட்
#TelanganaPride என்ற டேக்கையும் இதற்காக தெலுங்கானா மக்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். தெலுங்கர்கள் என்ன அடிமைகளா? சுயமரியாதையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தனி மாநிலம் கேட்டோம். அப்படி இருக்கும் போது இப்படி செய்வது என்ன நியாயம். அமைச்சர் என்றால் செருப்பு கூட மாட்டிவிட வேண்டுமா என்று #TelanganaPride டேக்கின் கீழ் தெலுங்கர்கள் பலர் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

வடஇந்தியா
இன்னும் சில வடஇந்தியாவில் கூட இப்படி நடந்தது இல்லை. பீகாரில் இப்படி நடந்தது இல்லை. அப்படி இருக்கும் போது குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒருவர் இப்படி செருப்பு அணிவிப்பது எப்படி நியாயம் ஆகும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். முக்கியமான ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் இப்படி போஸ்ட் செய்து வருகின்றனர். தெலுங்கு மக்களை அமித் ஷா அவமதித்துவிட்டார் என்று அவர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications