காப்பி அடிப்பதே அவர்தான்.. மநீம வைத்த டெஸ்டில் "பெயிலான" பிகே.. ரகசியத்தை உடைத்த கமல்ஹாசன்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் வைத்த டெஸ்டில் பிரஷாந்த் கிஷோர் பாஸ் ஆகவில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக வியூகங்களை வகுக்க பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக் குழு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திமுகவிற்கான தேர்தல் பணிகளை பிரஷாந்த் கிஷோரின் குழுதான் கவனித்து வருகிறது.
பஞ்சாப், டெல்லி, ஆந்திர பிரதேசம் என்று பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோர் முக்கிய காரணமாக இருந்தார். இவரை திமுகவும் இந்த தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

எப்படி
முன்னதாக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் பிரசாந்த் கிஷோரை அணுகியதாக செய்திகள் வந்தன. மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் பணிகளை வகுக்க பிகேவை கமல்ஹாசன் அணுகினார். ஆனால் இதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதனால் திமுக இவருடன் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் செய்திகளை வெளியாகின.

விளக்கம்
இந்த நிலையில் ஐபேக் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மனம் திறந்துள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியாவை ஆதரித்து நேற்று கமல்ஹாசன் பேசினார். இதில், மக்கள் நீதி மய்யத்திற்கு இந்த சட்டசபை தேர்தலில் நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது.

திமுக
திமுகவின் ஆலோசகராக தற்போது பிகே இருக்கிறார். பிரஷாந்த் கிஷோரை ஆலோசகராக நியமிக்க முதலில் மக்கள் நீதி மய்யம் விரும்பியது. இதற்காக அவரை நேரில் அணுகினோம். அவரிடம் நிறைய கேள்விகளை வைத்தோம்.

சோதனை
அவரை சோதனை செய்தோம். ஆனால் நாங்கள் வைத்த சோதனையில் பிரசாந்த் கிஷோர் பாஸ் ஆகவில்லை. எங்கள் டெஸ்டில் அவர் பெயிலாகிவிட்டார். அதனால் அவருடன் நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. இப்போது அவரிடம் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது.

திட்டங்கள்
திமுக சுயமாக திட்டங்கள் எதையும் வகுக்கவில்லை. திமுக எங்களின் திட்டத்தைதான் காப்பி அடிக்கிறது. நான் கொடுத்த வாக்குறுதிகளை பெயர் மாற்றி திமுக அறிவிக்கிறது. பிகேதான் எங்களின் திட்டங்களை காப்பி அடிப்பது, என்று கமல்ஹாசன் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications