மகளிர் உரிமைத் தொகை மட்டும் வெற்றியை கொடுக்காது.. ஆர்.எஸ்.பாரதிக்கு பிரவீன் சக்ரவர்த்தி பதில்!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை என்று காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் முன் இதுபோன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில் 4 மட்டுமே வெற்றி, 5 தோல்வி என்றும் பிரவீன் சக்ரவர்த்தியும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கு என்று பேசிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதில் பிரவீன் சக்ரவர்த்தி ஒரு படி மேல் சென்று, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஆட்சியில் பங்கு கொடுக்க ஒப்புக் கொள்கின்றன.

மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாடு மட்டும் என்ன ஸ்பெஷலா என்று கொந்தளித்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு 3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு தொகுதிப்பாக ரூ.2 ஆயிரம் என்று ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. இது தமிழ்நாடு முழுவதும் மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஆர்.எஸ்.பாரதி பதிலடி
இதன்பின் திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், ஆட்சியில் பங்கு தொடர்பாக ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை, கார்கே ஆகியோர் கேட்டால் பதில் அளிக்கலாம். மற்றவர்களுக்கு பதில் அளிக்க முடியாது. ஆட்சியில் பங்கு என்று பேசியவர்கள் நாளை முதல் கேட்க மாட்டார்கள். அவர்கள் இனி கூட்டணியில் சீட் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.
பிரவீன் சக்ரவர்த்தி பதில்
இதன் மூலமாக திமுக ஆட்சியில் பங்கு கொடுக்க முன் வராது என்பது திட்டவட்டமாக கூறியதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தில் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை எழுதி இருக்கிறார். அதில் பிரவீன் சக்ரவர்த்தி, மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். அதனை செயல்படுத்தியது பாராட்டத்தக்கது.
எந்தெந்த மாநிலங்கள்?
ஆனால் அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூட நம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய ம்,ஆநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வி அடைந்தன. என்று தெரிவித்துள்ளார். அதில் ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் பிஆர்எஸ், சட்டீஸ்கரில் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டெல்லியில் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தோல்வி அடைந்ததாக கூறியுள்ளார்.
திமுக கள செயல்பாடு
மத்தியப் பிரதேசத்தில் பாஜக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் , மகாராஷ்டிராவில் பாஜக, பீகாரில் பாஜக கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆர்எஸ் பாரதியின் கருத்துக்கு பிரவீன் சக்ரவர்த்தி இந்த பதில் அளித்துள்ளார். ஆனால் திமுக களத்திலும் கடுமையாக பணியாற்றி வருவதோடு, அடுத்தடுத்த மாநாடு, பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்திப்பது என்று மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்காதது ஏன்? "அவருக்கு வேறு திட்டம் இருக்கு.." பியூஷ் கோயல் கொடுத்த விளக்கம்! -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications