சொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’
Recommended Video

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் சொத்துகளை ஏலத்தில் இருந்து மீட்க கட்சி நிர்வாகிகளிடம் நிதி திரட்டும் முயற்சிகளில் இறங்கினார் பிரேமலதா. இதற்காக கூட்டப்பட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இனியும் கட்சிக்கு செலவு செய்ய முடியாது.. பெட்டிக் கடை வைத்தாவது பிழைத்து கொள்கிறோம் என தடாலடியாக நிர்வாகிகள் கூறியதால் அதிர்ந்து போனாராம் பிரேமலதா.
விஜயகாந்தின் வீடு, கல்லூரி அனைத்தும் ஏலம் விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தது. இது அரசியல்வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லோக்சபா தேர்தலின் போது அதிமுக-பாஜக கூட்டணியிடம் இருந்து பெரும் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்தது விஜயகாந்த் குடும்பம். ஆனால் டோக்கன் அட்வான்ஸ் மட்டும் கொடுத்து கழற்றிவிட்டனர்.

ஏலத்தில் சொத்துகள்
இந்நிலையில் சொத்துகளை ஏலம் விடுவதாக வங்கியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ5 கோடி கடனுக்காக ரூ100 கோடி சொத்துகளையா ஏலம் விடுவார்கள்? இதில் ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது என பலரும் பிரேமலதா மீது சந்தேகப் பார்வையை வீசினர்.

தேமுதிக கூட்டம்
இந்நிலையில் திடீரென தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. காணாமல் போய் கொண்டிருக்கும் கட்சியின் களநிலவரம் குறித்து விஜயகாந்திடம் சொல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஆறுதலடைந்து சென்னைக்கு வந்தனர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்.

பிரேமலதாவின் பேச்சால் அதிருப்தி
ஆனால் விஜயகாந்த் கூட்டத்துக்கு வரவே இல்லை. பிரேமலதாதான் இந்த கூட்டத்தை நடத்தினார். இதனால் செம கடுப்பில் இருந்த நிர்வாகிகளிடம் சொத்துகள் ஏலத்தில் வந்திருப்பது பற்றி உருக்கமாகவும் பிரேமலதா பேசினார். இவர் எதற்காக அடிபோடுகிறார் என்பதை புரிந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், எந்த தேர்தல் செலவுக்கும் கட்சி தலைமை பணம் தருவதே இல்லை. அத்தனை பேரும் கடனை வாங்கி சொத்துகளை விற்றுதான் செலவு செய்தோம்.

நிதி திரட்ட முடியாது
இப்ப உங்க சொத்துகளை மீட்க எங்களை நிதி வசூல் செய்து தர சொன்னால் எப்படி? எங்களுக்கு கட்சியே வேண்டாம்... சேலத்து கவுன்சிலர் வேட்பாளர் போல பெட்டிக் கடை வைத்து பிழைக்கிறோம் என முகத்தில் அறைந்தது போல பேசிவிட்டனர். இதனால் நொந்து போய்விட்டாராம் பிரேமலதா.

அடாவடித்தனமான விஜயபிரபாகரன்
இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன், விஜய பிரபாகரன் நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார். அவரது அடாவடி பேச்சும் அடங்குவதாக இல்லை. கல்வி சேவை செய்தே விஜயகாந்த் கடனாளியாகிவிட்டார்; அதனால் நிதி திரட்டி தாருங்கள் என மேலோட்டமாக பேசி நிர்வாகிகளை நம்ப வைத்து கொண்டிருக்கிறாராம் விஜய பிரபாகரன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications