சென்னையில் தஞ்சமடைந்த கோவா காங். எம்.எல்.ஏக்கள்.. ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போட ரிட்டர்ன்!
சென்னை/பனாஜி: பாஜகவால் பேரம் பேசி வளைக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் சென்னையில் தஞ்சமடைந்திருந்த கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 5 பேர் இன்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பனாஜி திரும்பினர்.
நாட்டின் 15-வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் வாக்குப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலானது நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சட்டசபை செயலகங்களில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட எம்.பிக்கள், மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் இத்தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலை முன்வைத்தும் கோவா அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. கோவாவில் காங்கிரஸ் கட்சியின் 11 எம்.எல்.ஏக்களை பாஜகவின் திரெளபதி முர்முவுக்கு வாக்களிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை தொடக்கம் முதலே முறியடித்து.
திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் போன எம்.எல்.ஏக்களை தேடி கண்டுபிடித்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வைத்தது. மேலும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட மாஜி முதல்வர் மீதும் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.
இருந்தபோதும் பாஜகவிடம் இருந்து தமது எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையில் 5 பேரை சென்னையில் தங்க வைத்தது காங்கிரஸ். சென்னையில் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவரது ஏற்பாட்டில் 2 நாட்கள் 5 கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கி இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக 5 எம்.எல்.ஏக்களும் சென்னையில் இருந்து கோவா சென்றடைந்தனர்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications