பிரதமர் நரேந்திர மோடி வருகை.. சென்னை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட மேஜர் அறிவிப்பு
சென்னை: சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று வருவதையொட்டி, ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு இன்று வருகிறார். இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு செல்கிறார். பின்னர் கார் மூலம் விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு செல்கிறார். பிரதமர் காரில் செல்லும் நேப்பியர் பாலம் முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம், பிரதமர் இன்று இரவு தங்கும் ஆளுநர் மாளிகை, மாலையில் செல்லும் நேப்பியர் பாலம் முதல் நேரு ஸ்டேடியம் மற்றும் ஆளுநர் மாளிகை சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் எனில், சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளார்களா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். இதேபோல் சென்னை முழுக்க பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
இதனிடையே விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மேலும் நேரு விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் அனைத்து தங்கும் விடுதிகளும் போலீசாரில் கண்காணிப்பின் கீழ் இருக்கிறது.
பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இன்றும், நாளையும் என 2 நாட்கள் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் எனில் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையாக, ஒப்பந்த ஊழியர்கள் சென்னை விமான நிலைய ஓடுபாதைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது, வழக்கமான ஊழியர்கள் மட்டுமே விமான நிலைய வளாகத்தில் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி அணுக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி, இன்று மாலை கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இரவு தங்குகிறார். இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தமிழக முக்கிய அரசியல் தலைவர்ளை பிரதமர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய இணையமைச்சல் எல் முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பிரதமர் மோடியை இன்று இரவு சந்திக்க வாய்பபு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கும் என்கிறார்கள்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications