"பெரியார் 100 ஆண்டு முன்பே பெண் உரிமைக்காக போராடினார்.." பிரியங்கா காந்தி இவ்ளோ அழகா தமிழ் பேசுறாரே
சென்னை: பெண் உரிமைக்காக நூற்றாண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் என்றும், சமூக மாற்றத்துக்கான புரட்சி உருவான இடம் தமிழ்நாடு எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புகழாரம் சூட்டி உள்ளார்.
சென்னை நந்தனத்தில் திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, சமாஜ்வாடி எம்பி டிம்பிள் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் பேசிய பிரியங்கா காந்தி தன்னுடைய உரைகளுக்கு இடையே தமிழில் பேசி அசத்தினார். "இந்திய பெண்களின் உரிமை பற்றி நான் பேசப் போகிறேன். நீங்களே என் தாய், என் சகோதரி. இங்கே இருப்பதை பெருமையாக நினைக்கிறேன்." என தமிழில் பேசிய அவர் பெண்களின் உரிமை தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்தியாவில் பெண்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்திக்கிறார்கள்.
பல தலைமுறைகளை தாண்டி நீடிக்கும் அடக்குமுறையிலிருந்து விடுபட பெண்களாகிய நீங்கள் தொடர்ந்து போராடி வருகிறீர்கள். எந்த நிலையில் இருந்தாலு இந்தியாவில் பெண்கள் அடக்குமுறைகளை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது." என்று தெரிவித்தார். சாதிய ஒடுக்குமுறைகள், பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக போராடிய சமூக நீதி தலைவர் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை பிரியங்கா காந்தி மேற்கொள் காட்டி உரையாற்றினார்.
"பெண் ஏன் அடிமையானாள் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுப்பியவர் பெரியார். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதை எதிர்த்து பல கட்டுரைகளை பெரியார் எழுதி உள்ளார். பெரியார் கேள்வி எழுப்பி நூறாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் பெண் அடிமைத்தனம் இன்றும் இருக்கிறது. அண்ணாவும், கலைஞரும் பெரியார் வழியில் பெண்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து உள்ளனர். தமிழ்நாட்டில்தான் சமூக மாற்றத்துக்கான புரட்சி உருவானது. சமத்துவத்தை முழுமையான நாம் பெற்றிட இன்னும் உழைத்திட வேண்டும். உடனடியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும்.
பெண்களுக்கான முக்கியத்துவத்தை அரசியலில் அதிகமாக்க வேண்டும். அடக்குமுறைகளுக்கு எதிராக பெண்களின் சகிப்புத் தன்மையை புகழ்ந்து பேசுவதை நிறுத்திட வேண்டும். பெண்கள் மனித குலத்திற்கே ஆதாரமாக விளங்குகின்றனர். பெண்கள் ஓன்று திரண்டால் எந்த சக்தியும் அதற்கு எதிராக நிற்காது. அன்பையும், போராடும் குணத்தையும் சமூகத்துக்கு கற்றுக் கொடுத்ததே பெண்கள் தான். பெண்கள் சமத்துவத்தை இன்னும் பெற முடியாத நிலை இருந்து வருகிறது. மாற்றத்திற்கான சரியான தளத்தில்தான் நாம் இங்கு நின்று கொண்டு உள்ளோம். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடுவதற்காக நாம் இங்கு திரண்டு உள்ளோம்." என்று அவர் பேசினார்.
-
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications