நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை.. ஜாமீனில் வந்த நெல்லை கண்ணன் கருத்து!
நேற்று இரவு கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
Recommended Video
சென்னை: ஜாமீனில் வெளியே வந்துள்ள தமிழறிஞர் நெல்லை கண்ணன், நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை என்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து நெல்லை கண்ணன் முறையற்ற விஷயங்களை பேசினார். இவர்களின் கதையை தீர்க்க வேண்டும் என்பது போல அவர் மோசமாக பேசி இருந்தார்.

இதற்கு பாஜக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு எதிராக இணையத்திலும், களத்திலும் பாஜகவினர் போராட்டம் செய்து வந்தனர். இதையடுத்து நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். அதன்பின் நெல்லை மாவட்ட நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு 11 நாட்கள் காவல் அளித்து சிறையில் அடைத்தது.
இதையடுத்து சிறையில் இருந்த நெல்லை கண்ணன் மூன்று நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தார். மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காலையும் மாலையும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் இவர் பிணையில் வெளியே வந்தார்.
இன்று காவல் நிலையத்திற்கு கையளித்திட சென்ற நெல்லை கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் வரிசையாக நிறைய கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் நெல்லை கண்ணன் எதற்கும் பதில் அளிக்கவில்லை.
கடைசியாக நெல்லைத் தமிழின் எல்லை அறியாதவர்களால் வந்த தொல்லை என்று நெல்லை கண்ணன் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். முன்னதாக நெல்லை கண்ணன் பேசிய நெல்லை தமிழை தவறாக புரிந்து கொண்டு அவர் மீது புகார் அளித்துவிட்டதாக சிலர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications