குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீடிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டிற்கு நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
என்ன தான் குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு தவறாமல் ஆண்டுதோறும் தடை விதிக்கப்பட்டாலும், உண்மை நிலவரம் என்னவென்று நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. குட்கா முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக கூறினாலும், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை வழக்கம் போலவே தமிழகத்தில் ரகசியமாக தொடர்கிறது.

முன்னதாக உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய மெல்ல கூடிய புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிப்பதாக அப்போது அவர் கூறியிருந்தார்.
குட்கா பான் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இந்நிலையில் குடிமக்களுக்கு கேடு விளைவிக்கும் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை, முற்றிலும் தடை செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் கண்டிப்புடன் கூறியது. இந்நிலையில், பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீதான தடையை ஆண்டு தோறும் நீடித்து, தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மே 23-ம் தேதியுடன் முடிந்து விட்டது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக அரசு, மாநிலத்தில் குட்கா பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது. அது போல அவற்றை சேமித்து வைக்கவும் கூடாது.
இந்த தடையை மீறி சட்டவிரோதமாக குட்கா பான் மசாலா பொருட்களை விற்பனை செய்ய கூடாது என கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் ஓராண்டு நீடிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணை ஒன்றையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு இந்தாண்டு மே மாதம் 23-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications