சென்னை மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கத்தில் இரவில் நீண்ட நேரம் மின்தடை.. பொதுமக்கள் ஆவேசம்
சென்னை: சென்னையில் நேற்று இரவு மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், அம்பத்தூர் பகுதியில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மேடவாக்கம் புஷ்பா நகர், பாபு நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், அதேபோல் ஜல்லடியன்பேட்டை, நெசவாளர் நகர், அண்ணா சாலை, புதுநகர், பல்லவன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நீடித்ததால், கடுமையான வெக்கையின் காரணமாக குழந்தைகள், முதியவர்கள் என பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

மின்தடை குறித்து புகார் அளிப்பதற்காக பொதுமக்கள் பலமுறை மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டும் முறையான பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், நேரடியாக மேடவாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு விசாரித்தபோது, பணியில் ஊழியர்கள் யாரும் இல்லாததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கை குழந்தையுடன் ஈபி அலுவலகம் முன்பு வந்த பெண் மின்சாரம் இல்லாததால் குழந்தை தூங்க முடியாமல் அவதிப்படுவதாக குற்றம் சாட்டினர்
இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தின் முன்பு திரண்டு திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேடவாக்கம் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இதே நிலை இருப்பதாக குற்றச்சாட்டினார்கள். மேடவாக்கம் மட்டுமின்றி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் சுற்றுவட்டாரங்களில் நேற்று மின்தடையால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதுபற்றி விளக்கம் அளித்த மின்சார வாரியம், மடிப்பாக்கம் 33 கி.வி துணை மின் நிலையத்திற்கு (SS), பள்ளிக்கரணையில் இருந்து வரும் 33 கி.வி மின் ஆதார மின்மாற்றி பழுதடைந்ததால் ஏற்கனவே தடைபட்டிருந்தது. மேலும், பெரும்பாக்கத்திலிருந்து வரும் 33 kv மின் பாதையிலும் இரவு 21.45 மணியளவில் பழுது ஏற்பட்டதால் மடிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெரும்பாக்கம் மின் பாதையில் இருந்த பழுது கண்டறியப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, நள்ளிரவு 1.00 மணியளவில் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டது என்று கூறியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்














Click it and Unblock the Notifications