தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே.. மும்மொழிக்கு இடமில்லை! திட்டவட்டமாக சொன்ன விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்றைய தினம் முதல்வர் விஜய் பேசினார். அப்போது மாநிலத்தில் இரு மொழி கொள்கையே தொடரும் என உறுதியளித்த அவர், நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு இன்று முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசியிருந்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் முதல்வர் விஜய் விளக்கம் அளித்தார். குறிப்பாக மாநிலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு தர வேண்டும் என்றும் +2 மார்க் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

Vijay TVK Tamil Nadu Assembly

பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு 1968இல் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. தமிழ் ஆட்சிமொழி, தமிழ் மொழியைப் பாதுகாப்பது, மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் மூலம் உலக அளவிலான வாய்ப்புகளை வழங்குவது, எந்தவொரு மொழியையும் கட்டாயமாகத் திணிப்பதைத் தவிர்ப்பது மற்றும் எதிர்ப்பது, நிலத்தின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பேணுவது என்பதை நம் தமிழக வெற்றிக்கழக ஆட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி மற்றும் இருமொழிக் கொள்கை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தே இல்லை.

கடந்த ஜூன் 11ம் தேதி நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பாகக் கலந்துகொண்டு 'வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்' உருவாக்கத் தேவையான நிதியையும், தமிழ்நாட்டிற்கு இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளைத் தருமாறும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இடங்களை நிரப்புதல் குறித்தும், செயற்கை நுண்ணறிவுத் தொடக்க நிறுவன வளர்ப்பு மையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கவும், இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கம் செயல்படுத்த வேண்டியும் கோரிக்கை விடுத்தோம்

மேலும், தமிழ்நாட்டில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே அமைச்சகத்தின் மேம்பாடு குறித்தும், அனைத்துக் கிராமங்களையும் டிஜிட்டல் இணைப்பு வசதி ஏற்படுத்துதல் குறித்தும், கூட்டுக்குடிநீர் திட்டம் தொடரவும், அரசின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கான முதலிடத்திற்கான கோரிக்கையும், மேகதாது அணை கட்டுமான நிறுத்தத்தை உறுதிப்படுத்தவும், மாநிலத்தின் மீது மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தாமல், புதிய கல்விக் கொள்கையைத் திணிக்காமல், தமிழ்நாட்டிற்கான கல்வித்தொகை ரூபாய் 3,284 கோடியை விடுவிக்கக் கோரியும் பேசினோம்

அண்டை மாநிலங்களுடனான நட்புறவு என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் மிகவும் அவசியமானது. தமிழ்நாடு தனது அண்டை மாநிலங்களுடன் நதிநீர் பங்கீடு, பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் நல்லுறவைப் பேணி வருகிறது. பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அண்டை மாநிலங்களுடனான நட்புறவை வலுப்படுத்தவும் நமது ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+