இந்திய விமானப்படை பைலட்டுகளால் பெருமிதம் அடைகிறேன்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய விமானப்படை பைலட்டுகளால் பெருமை கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 வகை விமானங்கள் தீவிரவாதிகளின் முகாம்களில் குண்டுகளை வீசி அழித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியுள்ளன. இதில் பல தீவிரவாத தளபதிகள், பயிற்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு நாடு முழுக்க பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்களும் வாழ்த்தும், பெருமிதமும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இந்திய விமானப்படை பைலட்டுகளால் பெருமிதம் கொள்வதாக ட்வீட் செய்துள்ளார்.
Proud of our #IndianAirForce pilots for their exceptional act of valor! 🙏 🇮🇳
— M.K.Stalin (@mkstalin) February 26, 2019












Click it and Unblock the Notifications