ஒட்டிக்கொண்டு இருப்பது என் இயல்பு அல்ல.. ஐடி விங் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? பிடிஆர் பரபர விளக்கம்
சென்னை: திமுகவின் ஐடி விங் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தது ஏன் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அவரின் பணிச்சுமை கருதி தற்போது மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிற்கு இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ல் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி என்ற பிரிவு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.

மாற்றம்
இந்த நிலையில் சமீபத்தில் அவரின் பணிகள் சரியில்லாத காரணத்தால் அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை கோரிக்கை விடுத்ததாக இணையத்தில் சில செய்திகள் உலவி வந்தன. அமைச்சர் தனது இலாக்காவில் கவனம் செலுத்துவதால் ஐடி விங்கில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று திமுக தலைமைக்கு புகார்கள் சென்றதாகவும் இணையத்தில் உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் உலவி வந்தன. இந்த நிலையில் தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

விவாதம்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென இப்படி ராஜினாமா செய்தது திமுக கட்சி வட்டாரத்தில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. திமுக ஐடி விங்கின் செயல்பாடு சரியாக இல்லாத காரணத்தாலும், சமீபத்தில் இணையத்தில் பிடிஆர் தொடர்பாக எழுந்த சில சர்ச்சைகள் காரணமாகவும், இணையத்தில் அவர் கோபமாக சில விஷயங்களை பேசியதன் காரணமாக அவர் இப்படி நீக்கப்பட்டு இருக்கிறாரோ என்ற கேள்விகள் கூட அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இது பற்றி பல அரசியல் வியூகங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.

பிடிஆர் ராஜினாமா ஏன்?
இந்த நிலையில் திமுகவின் ஐடி விங் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தது ஏன் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், அமைச்சர் பொறுப்புடன் கட்சி பொறுப்பையும் என்னால் கவனிக்க முடியவில்லை. இரண்டு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பது சிரமமாக இருந்தது. அதனால் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தேன். ஒரு பணியை செய்தால் முழு அர்ப்பணிப்போடு செய்ய முடியும்.

பிடிஆர் விளக்கம்
அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு கட்சி பதவியிலும் முழு அர்ப்பணிப்போடு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு பெருமைக்காக ஒரு பதவியில் இருக்க முடியாது . பெருமைக்காக பதவிகளில் ஒட்டிக்கொள்வது எனது அரசியல் இயல்பு அல்ல. அதனால் நான் கட்சியின் ஐடி விங் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்ள முடிவு செய்தேன், என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
-
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
டெல்லியில் அதானி அனுப்பிய அட்வைஸ் தூது.. கவனமாய் கேட்டுக்கொண்ட விஜய்.. இனிதான் பெரிய ட்விஸ்டே -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தோல்வி உறுதி.. 2001ல் திமுகவே தோற்றிருக்கு.. டிகேஎஸ் இளங்கோவன் ஒரே போடு -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
சட்டம் ஒழுங்கு பிரச்சனை அஸ்திரத்தை கையிலெடுத்த அதிமுக கூட்டணி .. மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின் -
Election Exclusive: நான் என்ன வைகோவா? இப்பவே அத்துக்கிட்டு போறேன்.. அடம் பிடிக்கும் தவாக வேல்முருகன்! போனை போட்ட தலைகள்!












Click it and Unblock the Notifications