Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அறிவுரை கூறிய முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ந்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.. சொன்ன விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 'மாநில உரிமைக் காவலர்' என்று அழைக்கத் தோன்றுகிறது என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். ஆட்சி நிர்வாகம் ஒரு புறம் என்றால், மறுபுறம் திராவிட இயக்க கொள்கைகளை, தத்துவங்களை இன்னும் 100 ஆண்டுகள் நிலைபெற செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வுடன் பல முயற்சிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார் என்றும் பிடிஆர் கூறினார்.

'தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு' நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடந்தது. இந்த விழாவின் முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் துரைமுருகன்,டிஆர்பி ராஜா உள்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

PTR Palanivel Thiagarajan responds to Chief Minister MK Stalin and praises him

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசுகையில், அவதூறுகளுக்கு பிடிஆரின் சொல்லாற்றல் எதிர்க்கட்சிகளுக்கு அவலாக மாறிவிடக்கூடாது.. இதனை கழக்கத் தலைவராக மட்டுமல்ல... அவர் மீது உள்ள அக்கறையில் அறிவுரை வழங்க கடமைப்பட்டுள்ளேன்... என் சொல்லை தட்டாத பிடிஆர்.. எனது அறிவுரையையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து விழாவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், இன்றைக்கு நாட்டையே சர்வாதிகார இருள் சூழ்ந்துள்ளது..மாநில உரிமைகளை தொடர்ந்து பறிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்த காலக்கட்டத்தில், அதனை எதிர்த்து போராடி, பல வெற்றிக்களை குவித்து, நாட்டிற்கே முன் உதாரணமாக திகழ்கிறார் நமது முதலமைச்சர் ஸ்டாலின்..

அதற்கு மிக சமீபத்திய உதாரணமாக, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மேற்கொண்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில அரசுகளின் மாண்பை காக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கூறலாம்.. அவர் மேற்கொண்டு இத்தகைய முயற்சிகளை பார்க்கும் போது, முத்தமிழர் அறிஞர் கலைஞருக்கு மிகவும் பிடித்த விபி சிங் அவர்களை சமூக நீதி காவலர் என நான் அழைப்பது போல், நமது முதல்வர் ஸ்டாலினை மாநில உரிமை காவலர் என்று அழைக்க தோன்றுகிறது..

ஆட்சி நிர்வாகம் ஒரு புறம் என்றால், மறுபுறம் திராவிட இயக்க கொள்கைகளை, தத்துவங்களை இன்னும் 100 ஆண்டுகள் நிலைபெற செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வுடன் பல முயற்சிகளை தலைவர் மேற்கொண்டு வருகிறார்.. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற வரலாற்று தரவுகளை கொண்ட நூல் வெளியாவது (தமிழ்வேள் பி.டி.ராஜன் வாழ்வே வரலாறு நூல்) திராவிட இயக்க முன்னோடிகள் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க சிறிய அளவிற்காது பங்களிக்கும் என்று நம்புகிறேன்..

நீதி கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரும், முற்போக்கு சிந்தனையாளரும், சிறுவயதிலேயே தனது பெற்றோர்களை இழந்த தமிழ்வேள் பிடி ராஜன் அவர்களை பொறுப்புடன் வளர்த்து திராவிட இயக்கத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் என்று மாறா பிணைப்பை ஏற்படுத்தியவருமான என் கொள்ளுத்தாத்தா எம்டி சுப்பிரமணியன் அவர்களையும் இந்த தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளேன்.. அத்துடன் நாடேபோற்றும் தலைவரின் கரங்களால் தமிழ்வேளின் இந்த மலரை வெளியிடும் பண்பாட்டு கடமையை வழித்தோன்றலாக இயன்றவரை நிறைவேற்றிஉள்ளேன்" இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+