தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி சடங்கு.. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா தொற்றால் நேற்று காலை இந்த மண்ணுலகை விட்டு பிரிந்துவிட்டார். அவருடைய உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Public should not be allowed to Vijayakanth last rites, police

இந்த நிலையில் இடநெருக்கடி காரணமாக அவரது உடல் தீவுத்திடலுக்கு இன்று காலை 5 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பு, நளினி, ராதாரவி, வாகை சந்திரசேகர், பாக்யராஜ், சாந்தனு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அது போல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஓபிஎஸ், கடம்பூர் ராஜு, ஜிகே வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. விவிஐபிகள் அஞ்சலி செலுத்திமுடித்துவிட்ட நிலையில் தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஊர்வலத்திற்கு பூ அலங்காரம் செய்யப்பட்ட வாகனம் தயாராக உள்ளது. அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

இதற்காக அங்கு குழித்தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கூட்டநெரிசலை தவிர்க்க உறவினர்கள், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என 200 பேருக்கு மட்டும் காவல் துறையினர் பாஸ் வழங்குகிறார்கள். அந்த பாஸை பெற்றவர்கள் மட்டும்தான் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும். பாஸ் இல்லாதவர்களுக்கு இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கோயம்பேட்டில் காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+