"மதநல்லிணக்கம் காப்போம்.." காயிதே மில்லத் 126ஆவது பிறந்தநாள்.. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
சென்னை: காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
காயிதே மில்லத்தின் 126 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் உருவானபோது, அங்குப் புலம் பெயராமல் இந்தியாவை அதிகளவிலான இஸ்லாமியர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அப்போது "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949ஆம் ஆண்டு இந்தியன் யூனியன் முசுலிம் லீக் கட்சியை தலைமை தாங்கினார் காயிதே மில்லத். அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மு க ஸ்டாலின்
அவரது 126ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வலையம் வைத்து மரியாதை செலுத்தினார். கண்ணிய தென்றல் காயிதே மில்லத்தின் பிறந்தநாளில், அவர் உருவாக்கிய மதநல்லிணக்கம் காப்போம். அவரைப் போலத் தமிழ்ப் பற்றாளர்களாக - தமிழ்நாட்டு வளர்ச்சிக்குப் பாடுபடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுக இணை ஒருங்ணிகைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவராகவும், இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் 126ஆவது பிறந்தநாளில் அவரின் புகழைப் போற்றி வணங்குகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Array
அதேபோல காயிதே மில்லத் 126வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச்.ஹஸ்ஸான் மரியாதை செலுத்தினார். அமமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் செந்தமிழன், சிஆர் சரஸ்வதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

டிடிவி தினகரன்
அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சிறுபான்மை மக்களுக்கான அரசியல் எழுச்சியின் அடையாளம், அனைத்து தரப்பினரும் மதித்துப் போற்றிய ஆளுமை கண்ணியத்திற்குரிய பெருமகனார் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்களை, அன்னாரது பிறந்த நாளில் போற்றுகிறேன். மதநல்லிணக்கத்தைப் பாதுகாத்திடவும், தமிழ் மொழியின் உயர்வுக்காகவும்,மாநில உரிமைகளுக்காகவும்,இஸ்லாம் சமூகத்தினர் உயர்கல்வி பெறவும் காயிதே மில்லத் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பணிகளை எப்போதும் நினைவு கூர்வோம்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications