20% ஏழைகள் அடையாளம் காணப்படுவர்.. ராகுலின் திட்டம் சாத்தியம்.. ப.சிதம்பரம் விளக்கம்
Recommended Video

சென்னை: ராகுல் காந்தி அறிவித்த ரூ.72,000 திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் இந்திய பொருளாதாரம் சூறையாடப்படும் என்றும் 4 சதவீத பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும் என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்திருந்தார். அதேநேரம் கடன் சுமையும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதேபோல், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ராகுல் காந்தி அறிவித்த ரூ.72,000 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் சுமார் 5 கோடி ஏழை குடும்பங்கள் பயனடையும் என்றார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும், ஏழைக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 நிதியுதவி திட்டம் முதலில் சோதனை அடிப்படையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் போன்று செயல்படுத்தப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார். வருவாய் உறுதி திட்டத்தால் 5 கோடி குடும்பங்களை சேர்ந்த 25 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் கூறினார்.
தொடக்கத்தில், 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என கூறியவர் அருண்ஜெட்லி என்று குற்றம் சாட்டிய ப.சிதம்பரம், மாதந்தோறும் ரூ.6000 குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.
முறைகேடுகள் நடைபெறாமல் இந்தியாவில் வாழும் 20% ஏழைகள் அடையாளம் காணப்படுவர் என்றும் படிப்படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications