தமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள்.. ரயில்வே ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஜூன் 1 முதல் மாவட்டங்களுக்கு இடையே நான்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

Recommended Video

    Indian railway guidelines | ரயிலில் போறிங்களா? அப்போ இதை கடைபிடிக்க வேண்டும்

    ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் மாநில அரசின் அறிவுறுத்தல் காரணமாக ரயில் சேவை தொடங்கவில்லை.

    Railways approves 4 special trains from June 1 in tamil nadu

    எனினும் தமிழக அரசு ஜூன் 1 முதல் சென்னைக்கு செல்லாத வகையில், அதேநேரம் மற்ற மாவட்டங்களுக்கு இடையே நான்கு சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு பரிந்துரை செய்தது.

    இதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கோவை கோவை - மயிலாடுதுறை (செவ்வாய்க்கிழமை தவிர்த்து), ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ( மதுரை - விழுப்புரம் - மதுரை), இன்டெர்சிட்டி சூப்பர் பாஸ்ட் (திருச்சி - நாகர்கோயில் -திருச்சி), கோவை சூப்பர் பாஸ்ட் (கோவை -காட்பாடி -கோவை ) உள்ளிட்ட நான்கு ரயில்கள் ஜூன் முதல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பு பதிவு தொடங்கியது.

    தற்போதைய நிலையில் லாக்டவுன் நாளையுடன் முடிகிறது. ஒரு மாவட்டம் விட்டு இன்னொரு மாவட்டம் செல்ல பாஸ் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் பேருந்து போக்குரத்தும் இன்னும் தொடங்கவில்லை. இந்த இருசேவைகளும் கொரோனா அதிகம் பாதிக்காத மாவட்டங்களுக்கு இடையில் ஜூன் 1 முதல் அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+