Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹெல்ப் பண்ண சிஸ்டம் இப்ப ஃபேட் ஆக போகுது.. சென்னையில் மழை தொடருமா? சென்னை ரெயின்ஸ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்கரையில் இருந்த சுழற்சி விரைவில் மங்கிவிடும் என்றும் இதனால் கிழக்கு திசை காற்றில் இருக்கும் ஈரப்பதம் தற்காலிகமாக குறையும் என்றும் சென்னை ரெயின்ஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது.

Rain in Chennai reduces from today, chennai rains

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, இன்று காலை 5:30 மணி அளவில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.

இது அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, 16ஆம் தேதி ஆந்திர கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

அதை தொடர்ந்து, இது வடகிழக்கு திசையில் திரும்பி, நவம்பர் 17 ஆம் தேதி ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்க கடலை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆகிய இடங்களில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நேற்று முதலே கனமழை வெளுத்தெடுத்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் நேற்றைய தினம் மாலை காலை முதலே மழை பெய்த வண்ணம் இருந்தது. இது மாலை போக போக தீவிரமடைந்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் மழையின் தீவிரம் எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை ரெயின்ஸ் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உள்பட தமிழக கடலோர பகுதிகளில் மழையின் அளவு குறையும்.

ஏனென்றால் இன்று வங்கக் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறுகிறது. கடந்த 48 மணி நேரமாக இலங்கை கடற்கரையை சுற்றியிருந்த வளி மண்டல சுழற்சியால் மழை பெய்தது. தற்போது அந்த சுழற்சி விரைவில் மறையும். இனால் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்றில் ஈரப்பதமும் குறையும். அதே வேளையில் அடுத்த சில நாட்களுக்கு கேரளா, தென் தமிழகத்தில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+