சென்னையில் திடீர் மழை.. ஒரு வேளை அதுதான் காரணமா இருக்குமோ!.. வானிலை அறிக்கையை பார்க்கும் மக்கள்!
சென்னை: சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் உருவாகவுள்ள நிலையில் இந்த மழையும் பூமியை நனைத்து விட்டு சென்றது.
வடகிழக்குப் பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் நிவர் புயல் உருவானது. இந்த புயல் சென்னை- காரைக்கால் இடையே கடந்த 26-ஆம் தேதி கரையை கடந்தது.
இந்த நிலையில் 27-ஆம் தேதி சென்னையில் கடும் குளிர் வாட்டியது. புயல் சென்னையில் வடக்கே மிகவும் அருகில் சென்றதால் குளிர் ஏற்பட்டதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

வெயில்
இந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் வெயில் தலை காட்டி வருகிறது. இதையடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு சென்னையில் முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதையடுத்து இன்று வானம் விட்டு விட்டு வெயில் காய்ந்தும், வெயில் இல்லாமலும் இருந்தது.

எங்கு மழை
இதையடுத்து மதியம் சென்னையின் முகப்பேர், ஹஸ்தினாபுரம், வடபழனி, சாலிகிராம், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. தற்போது சென்னையில் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது. இன்று கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மழை ஏன்
பொதுவாக கார்த்திகை தீபத்தன்று மழை பெய்யும் என்பது ஐதீகம். அதனால் இன்று மழை பெய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வங்கக் கடலில் அடுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ள நிலையில் அதனால் மழை பெய்ததா எனவும் தெரியவில்லை.

வெப்பச்சலனம்
இந்த திடீர் மழைக்கு காரணம் தெரியாமல் மக்கள் குழப்பமடைந்தனர். வெப்பச்சலனம் ஏற்பட்டதா, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த மழையா என மக்கள் வானிலை ஆய்வறிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications