கிடப்பில் போடப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு திட்டம்.! கட்டாயமாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகும் நேரத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட சமூக ஆர்லவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வருடந்தோறும் கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் நிலைமையை சமாளிக்க நிலத்தடி நீர் இதுவரை கைகொடுத்து வந்தது. ஆனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மாநிலம் முழுவதுமுள்ள, சுமார் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர் வெகுவாக சரிந்து விட்டது.

தலைநகர் சென்னை உட்பட பல இடங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தியதாலும், திருட்டுத்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் சமூக விரோதிகளாலும் தான் நிலைமை இவ்வளவு மோசமானதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் நகர்மயமாதல், புற்றீசல் போல பெருகி வரும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட காரணங்களால் நீர் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
சமீப ஆண்டுகளாக குறைந்த காலத்தில் அதிகளவு மழை பெய்கிறது. இதனால் அதில் சுமார் 65 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. மேலும் பெரும்பாலான வீட்டை சுற்றியுள்ள இடங்களை சிமெண்ட் தரையாக மாற்றியுள்ளனர். இதனால் வீடுகளை சுற்றி பெய்யும் மழையால் கிடைக்கும் நீரானது, பூமிக்குள் செல்ல முடிவதில்லை அந்நீர் வழிந்தோடு கால்வாய்களுக்குள் சென்று வெளியேறி விடுகிறது.
அரசு கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும், முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அவை மழை நீரை சேமிக்கும் சக்தியை இழந்து காணப்படுகின்றன.
அதே போல தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இக்குடியிருப்புகளுக்கு அனுமதி தரும் உள்ளாட்சி நிர்வாகங்கள், மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கோண்டு அவற்றிற்கு அனுமதி வழங்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி அமைத்துள்ள வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புகளில் மழைநீரை சேகரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில், உரிய ஆய்வு நடத்தி மழை நீரை சேகரிக்க உரிய நடவடிக்கைகளை அதிகாரிகன் துரிதப்படுத்த வேண்டும் என சமூக ஆர்லவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே மழை நீரை வீணாகாமல் பாதுகாக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மிக தீவிரமாக அமல்படுத்துவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இவ்வாறு மழை நீரை தொடர்ந்து நாம் சேமித்து வந்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து ஆண்டு முழுவதும் தேவயான நீர் மக்களுக்கு கிடைக்கும் என சமூக ஆர்லவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications