கோவை, நீலகிரி மக்களே.. குடை ரெடியா.. இடி, மின்னலுடன் இன்று கன மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையைப் பொறுத்தளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரில் பல இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
லேசான மற்றும் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடரப்போகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் சோலையார் மற்றும் வால்பாறை பகுதிகளில் சனிக்கிழமை 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது, நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி மற்றும் தேவலா பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அப்போது முதல் இப்போது வரை அந்த மண்டலத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையின் சில பகுதிகளில், நேற்று மாலை லேசான மழை பெய்தது.












Click it and Unblock the Notifications