சென்னையில் அக்டோபருக்குள் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள்.. மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை: தலைநகர் சென்னையில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 2 லட்சம் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்படும் என, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழையால் சென்னைக்கு 20% மழை மட்டுமே கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழையால்தான் சென்னைக்கு அதிக மழை கிடைக்கிறது.
மேலும் சென்னையின் நில அமைப்பு இயற்கையாகவே குறைவான மழை நீரை சேமிக்கும் திறன் கொண்டதாக உள்ளது என குறிப்பிட்டார்.

வரும் வடகிழக்கு பருவமழை காலத்திற்குள் சென்னையில் உள்ள 250 குளங்களில், சுமார் 150 குளங்களில் முழு அளவில் பராமரிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் மழை நீரை சேமிக்க முடியும் என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பழைய கிணறுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய கிணறுகளை கண்டறிந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த கிணறுகள் எல்லாம் கடந்த 25 முதல் 30 வருடங்களாக உபயோகப்படுத்தப்படாமல் உள்ளவை. இந்த கிணறுகளை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து மழை நீரை கொண்டு வந்து கிணறுகளுக்குள் சேமிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.
மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்காக பழங்காலத்தில் வீடுகளில் அமைக்கப்பட்ட 90 ஆயிரம் கிணறுகளையும் சீரமைத்து பயன்படுத்த உள்ளோம். அதே போல மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்த போவதில்லை என்றார் மாநகராட்சி ஆணையர். மேலும் மக்கள் தாங்களாகவே முன்வந்து மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
எனினும் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 சதவீத வீடுகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால் எஞ்சிய 50 சதவீத வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை அப்படி இருந்தாலும் செயல்பாடில்லாமல் உள்ளது.
இது போன்ற வீடுகளுக்கு மாநராட்சி நிர்வாகம் பல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மண்ணின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்புகளை ஏற்படுத்த ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.
2019ம் ஆண்டுக்குள் 12 லட்சம் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி விட சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் குறிக்கோள் வைத்து செயல்பட துவங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications