இப்போது முதல்வரை பார்க்க முடியாது... ராஜேஷ்வரிபிரியாவை திருப்பி அனுப்பிய போலீஸ்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஷ்வரிபிரியா முதல்வரிடம் மனு கொடுக்க சென்ற நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மட்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஷ்வரி பிரியா மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிக்க தலைமைச் செயலகம் சென்றிருக்கிறார்.

கொரோனா பரவும் சூழலில் தற்காலிகமாக மனுக்கள் பெறுவதில்லை என்றும், முதல்வரையும் கொரோனா பதற்றம் முடியும் வரை பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலக வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்ட அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். அங்கும் இதே பதிலை காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆனாலும் மதுவுக்கு எதிரான தனது மனுவை முதல்வரிடம் வழங்காமல் செல்ல மாட்டேன் என கூறியிருக்கிறார் ராஜேஷ்வரி பிரியா. பிறகு காவல்துறை உயர் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் மனுவை தாங்களே முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அதையேற்று தனது மனுவை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றிருக்கிறது ராஜேஷ்வரிபிரியாவுடன் சென்ற குழு.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications