பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... தயவு தாட்சணையின்றி தண்டனை தருக -ராஜேஸ்வரிபிரியா
சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியதுடன் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், தமிழகத்தில் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், அதுவும் கொரோனா காலத்தில் குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4% மட்டுமே பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும், காவல்துறை விசாரணையிலும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது போன்ற விவகாரங்களுக்காக மத்திய அரசால் நிறுவப்பட்ட வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இரண்டு மாதங்களுக்குள் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல் சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து இழிவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் பெண்கள் உறுப்பு குறித்து பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என ராஜேஸ்வரிபிரியா சாடியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications