செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா! ரஜினிகாந்தை உற்சாகமடைய வைத்த 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் பிஜிஎம்!
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் பிஜிஎம் ஒலிக்கவிடப்பட்டதால் நடிகர் ரஜினிகாந்த் உற்சாகமடைந்தார்.
Recommended Video
பல்வேறு நாடுகளின் கொடி அணி வகுப்பு நிகழ்வின் போத பி.ஜி.எம்.கள் மாற்றி மாற்றி ஒலிக்க விடப்பட்டன.
தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த் அங்கு நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.

செஸ் ஒலிம்பியாட்
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் தலைமை தாங்கிய நிலையில் சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் மிகவும் இறுக்கமாக காணப்பட்ட அவர், செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற நாடுகளின் கொடி அணிவகுப்பு நிகழ்வின் போது மட்டும் சற்று உற்சாகமாக காணப்பட்டார். அதற்கு காரணம் தாம் நடித்த முத்து திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடல் பிஜிஎம் ஒலிக்கவிடப்பட்டதே ஆகும்.

உதயநிதி -வைரமுத்து
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடைபெற்ற அனைத்து கலை நிகழ்ச்சிகளையும் மிகவும் உன்னிப்பாக கவனித்த ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின், வைரமுத்து உள்ளிட்ட ஒரு சிலரை மட்டும் பார்த்து புன்னகைத்தார். மற்றபடி முகத்தில் பெரியளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதவராக அமர்ந்திருந்தார் ரஜினிகாந்த்.

நிம்மதி சந்தோஷம்
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஜினி, சந்தோஷமும் நிம்மதியும் தனக்கு இல்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை மெய்ப்பிக்கும் விதமாகவே அவரது செயல்பாடுகளை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications