நாம் அவசியம் சந்திப்போம்... சித்த மருத்துவர் வீரபாபுவை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சித்த மருத்துவர் வீரபாபுவை தொலைபேசியில் அழைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவரது சேவையை பாராட்டியுள்ளார்.
மேலும், நாம் அவசியம் சந்திப்போம் என்றும் சித்த மருத்துவர் வீரபாபுவிடன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
இது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சித்தமருத்துவர் வீரபாபு மற்றும் அவரது குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

மருத்துவர் வீரபாபு
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் சூழலில், அதனை கட்டுக்குள் வைக்கும் முயற்சியில் சித்த மருத்துவர் வீரபாபு ஈடுபட்டுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு தனது குழுவினருடன் செல்லும் வீரபாபு மூலிகை தேநீர், கபசுரக் குடிநீர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கும் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்.

மாநகராட்சி நிர்வாகம்
சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கி மருத்துவத் தொண்டு ஆற்றிவருகிறார் சித்த மருத்துவர் வீரபாபு. மற்றவர்களை போல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், வெறுமனே ஆலோசனைகளை மட்டும் கூறிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல், கொரோனா பெருந்தொற்றில் இருந்து மனித சமூகத்தை காக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காகத் தான் நடிகர் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியுள்ளார்.

பாராட்டுகள்
சித்த மருத்துவர் வீரபாபுவிடம் தொலைபேசியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''கொரோனா நோயாளிகளுக்கு நல்லது செய்கிறீர்கள், பாராட்டுக்கள்; நாம் அவசியம் ஒருநாள் சந்திப்போம்'' எனக் கூறியுள்ளார். ரஜினிகாந்த் அழைத்து பாராட்டியது சித்த மருத்துவர் வீரபாபுவிற்கும் அவரது குழுவினருக்கும் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. கொரோனாவுக்கு ஆங்கிலத்தில் இன்னும் மருந்து கண்டறியப்படாத நிலையில் சித்த மருத்துவத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வீரபாபுவிடம் ஒப்படைப்பு
சென்னையில் ஜவஹர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை சித்த மருத்துவர் வீரபாபுவிடம் ஒப்படைத்துள்ளது சென்னை மாநகராட்சி. நோயாளிகளுக்கு கொரோனா வார்டில் இருக்கிறோம் என்ற எண்ணத்தை களையச் செய்து இயற்கை முறையிலான மூலிகை பொருட்களை கொண்டு சிகிச்சை தருகிறார் வீரபாபு. இதனிடையே இவர் சென்னையில் பல வி.ஐ.பி.களுக்கும் சித்த மருந்து கலவையை அளித்து வருகிறார்.
-
விஜய் சொல்லி கொடுத்து தான் ரஜினி பற்றி ஆதவ் பேசினாரு..! “அந்த” கதையை மறைக்க நடந்த சதி! பிரபலம் ஆதங்கம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications