ரஜினிகாந்த் தலைமையில் நாளை மக்கள் மன்றத்தின் மா.செ.க்கள் கூட்டம்.. வழக்கம் போல கூடி கலையும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சி தொடக்க விழா குறித்து ஆலோசிக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    செய்தி தெரியுமா? | 04-03-2020 | OneindiaTamil News

    ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்தே 2 ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் அதற்கான எந்த ஒரு சமிக்ஞையும் தென்படவில்லை.

    Rajinikanth to meet Makkal Mandram District Secretaries

    ஆனால் போயஸ் கார்டனில் தமது வீட்டின் முன்புறம் நடுத்தெருவில் நின்று செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அப்படி செய்தியாளர்கள் சந்திப்பிலும் திட்டவட்டமான தெளிவான எந்த ஒரு கருத்தையும் வெளிப்படுத்தாமல் பட்டும் படாமல் பூடகமான கருத்துகளையே ரஜினிகாந்த் கூறி வருகிறார்.

    இதனால் ரஜினிகாந்தின் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும் சர்ச்சைக்குரியதாகவும் விவாதத்துக்குரியதாகவும் மாறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ரஜினிகாந்த் தலைமையில் அவரது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை முதல் 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த இடைவேளையில் மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரஜினிகாந்த் கூட்டியுள்ளார்.

    இதில் அரசியல் கட்சி தொடக்க விழா குறித்து ரஜினிகாந்த் ஆலோசிக்கலாம் என ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதேநேரத்தில் அண்ணாத்த படத்துக்காக ரசிகர்களை தக்க வைக்க இத்தகைய கூட்டத்தை கூட்டியுள்ளார் ரஜினிகாந்த் என்கிற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+