7 பேர் விடுதலை.. ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி வழக்கு.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கலாம் என்ற அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு உகந்ததா என்பது பற்றிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கலாம் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

Rajiv Gandhi life convict Nalini petition adjourned by madras high court

இது தொடர்பாக வழக்கு இன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருக்க முடியாது என நளினி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் வழக்கறிஞர் என்ன தெரிவித்தார் என்றால், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது பற்றிய தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+