சனாதனம் குறித்து யார் பேசினாலும் இந்துக்கள் சிங்கம் போல் சீறணும்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேச்சு
சென்னை: இந்து மதத்தை தவறாக பேசுபவர்களைக் கண்டு இந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
இந்து மதத்திற்கு எதிராக யாராவது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தால் அதற்கு பதிலடி கொடுப்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர். ஆண்டாள் குறித்து கவிஞர் ஒருவர் தவறாக பேசியதாக சித்தரித்து கண்டனங்கள் குவிந்தன.

அப்போது கூட அந்த நபரை எதிர்த்து சடகோப ராமானுஜ சுவாமிகள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது ஜீயர் கூறுகையில் இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும் இனி அமைதியாக போக மாட்டோம்.
கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்குத் தெரியும் என்றார். இது கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் இந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும் என அவர் பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருப்பாவை முற்றோதுதல் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரான சடகோப ராமானுஜ ஜீயர் இந்துக்களை விமர்சிப்பவர்கள் குறித்து கடுமையாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் ஆண்டாள் தாயார் இல்லை என்றால் இந்த உலகமே கிடையாது. சனாதன தர்மம் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு. இன்று கோயில் வழிபாடுகளில் பெண்கள் அதிகளவில் கலந்து பங்கேற்பது சனாதன தர்மத்தின் எழுச்சியாகும். எந்த மதத்தையும் தாழ்வாகவோ இழிவாகவோ பேசக் கூடாது என்பது எங்கள் கருத்து.
அதே நேரம் சனாதன தர்மத்தையோ இந்து மதத்தையோ இழிவாக பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக இந்து மதத்தையும் கடவுள்களையும் தப்பு தப்பாக பேசுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதைக் கண்டு இந்துக்கள் விழித்துக் கொண்டு சிங்கம்போல் சிலிர்த்து எழ வேண்டும் என்றார்.
பின்னணி என்ன?: சனாதனத்தை டெங்கு, மலேரியாவை ஒழிப்பது போல் ஒழித்து அழிக்க வேண்டும் என சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்களை பாஜகவினரும் இந்து முன்னணி அமைப்பினரும் தெரிவித்தனர். இதற்காக மன்னிப்பு கேட்குமாறு கோரிய நிலையில் அதற்கு அமைச்சர் உதயநிதி மறுத்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. சனாதனம் குறித்து பாஜக திமுகவுதக்கு எதிரே கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
-
தேர்தல் நேரத்தில் 3 மாவட்ட இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. "மினி டைடல் பார்க்" அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications