பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டார் உயர் கல்வி அமைச்சர் அன்பழகன்
சென்னை: பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பத்திவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற உயர் கல்வி அமைச்சர் அன்பழகன், ரேண்டம் எண் ஒதுக்கீட்டை வெளியிட்டார்.
தமிழகத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 1,80,000 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மே 2ம் தேதி தொடங்கி 31ம் தேதி நிறைவுற்றது.

நடப்பாண்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப இயக்குநரகம் நடத்துகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 1,33,116 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் என்ற சமவாய்ப்பு எண் இன்று வெளியிடப்பட்டது.
ரேண்டம் எண்ணை பயன்படுத்தியே, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், தர வரிசை பட்டியலை தயாரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் போது, யாருக்கு முன்னுரிமை என்பதில் குழப்பம் ஏற்படும். அப்போது, கணிதத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர், முதலில் தேர்வு செய்யப்படுவார். அதில், இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், இயற்பியல் மதிப்பெண்ணில் அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும்.
இதிலும் சம மதிப்பெண் பெற்றிருந்தால் 2 மாணவர்களின் நான்காவது முக்கிய பாடமான உயிரியல் அல்லது கணினி அறிவியல் போன்றவற்றில், அதிக மதிப்பெண் பெற்றவருக்கு முன்னுரிமை தரப்படும். இதிலும் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த தேதியில் யார் மூத்தவர் என பார்க்கப்படும். பிறந்த தேதியும் ஒன்றாக இருக்கும்பட்சத்தில் தான் ரேண்டம் எண் என்ற சம வாய்ப்பு எண் கணக்கில் எடுக்கப்படும்.
ரேண்டம் எண்ணை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். ரேண்டம் எண்ணை இணையதளத்தில் பார்க்கலாம் எனவும் மொபைல் எண்களுக்கும் அனுப்பப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 42 மையங்களில் நடைபெற உள்ளது மேலும் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், ஜூன் 17ம் தேதி வெளியாகிறது. பின்னர் ஜூன் 20ம் தேதியிலிருந்து பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications