Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் இனி "இந்த பொருள்" கிடைக்காதா? திடீர்னு வரும் தட்டுப்பாடு.. ஓடோடி வந்து தாங்கும் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளிலில் அரிசிக்கு தட்டுப்பாடு வரலாம் என்று கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து தமிழக அரசு நிம்மதி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. என்னாச்சு?

சாப்பாட்டு அரிசியின் விலை, 2 மாதங்களுக்கு முன்பே அதிகரிக்க துவங்கிவிட்டது.. இந்த விலை உயர்வுக்கு அப்போது சில காரணங்கள் சொல்லப்பட்டன.. குறிப்பாக தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பருவமழை குறைந்துவிட்டதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்..

Ration Card Holders and Due to reduced paddy procurement, Ration Rice has become a problem

இயற்கை சீற்றம் : மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் வரத்து குறைந்துவிட்டதால்தான் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்.. பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் போன்றவற்றை, 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியானதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்.

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி வெகுவாக குறைந்துவிட்டதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்.. காவிரி நீர் பற்றாக்குறைதான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள். குறுவை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, கர்நாடகாவிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரும் அரிசி லோடுகளின் எண்ணிக்கை குறைந்ததுதான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்.

ரேஷன் அரிசி: ஆனால், இவை அனைத்துமே பிரதான காரணம் என்பதை மறுக்க முடியாது. இறுதியில் நெல்கொள்முதல் வெகுவாகவே, குறைந்துவிட்டது. வழக்கமாக, இந்திய உணவு கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

நடப்பு நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ல் துவங்கியது.. ஆனால், மழை அவ்வளவாக இல்லாததால் டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கருக்கு, நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுவிட்டது.. அதனால், இந்த மாதம் 8ம் தேதி வரை, 92,954 விவசாயிகளிடமிருந்து, மொத்தம் 5.28 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு: இதற்காக அவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள், 1,088 கோடி ரூபாய் வழங்கியிருக்கின்றன.. ஆனால், முந்தைய சீசனில் இதே காலத்தில் நெல் கொள்முதல், 8.35 லட்சம் டன்னாக இருந்தது. இப்போது 3 லட்சம் டன்னுக்கு மேல் குறைந்துவிட்டதால், ரேஷன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள்.

இருந்தாலும், பொங்கல் அறுவடைக்கு பிறகு, நெல் வரத்து அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படியே அரிசிக்கு தட்டுப்பாடு வந்தாலும்கூட, பிற மாநிலங்களில் இருந்து வாங்கியாவது, ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி அரிசி வினியோகம் செய்யப்படும் என்று அரசுத்துறை சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+