சர்க்கரை அட்டைதாரர்களுக்கு அதிரடி.. இந்த 2 பொருளையும் நாளேயே ரேஷனில் வாங்கிடுங்க.. இல்லாட்டி சிக்கல்
சென்னை: தமிழகத்தின் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்வதற்கான முக்கிய அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் என்னென்ன?
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலைகளிலும், இலவசமாகவும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.. ஆனால, இதில், துவரம் பருப்பு, பாமாயில் இந்த 2 பொருட்கள் மட்டும், ஆகஸ்ட் மாதத்தில் சரியாக வழங்கப்படவில்லை என்ற புகார் பரவலாக எழுந்தது.

குற்றச்சாட்டு: ஆகஸ்ட் மாதம் மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாகவே இந்த பொருட்களை, முறையாக விநியோகிக்கவில்லை என்றும், கடந்த மே மாதம் முதலே பாமாயிலுக்கும், பருப்புக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் ரேஷன்தாரர்கள் அதிருப்தியும், புகார்களும் தெரிவித்து வந்தனர். எனவே, மே மாதத்திற்கான பொருளை ஜூன் மாதம் வாங்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் கூறியிருந்தாலும், பல கடைகளில் போதிய இருப்புகள் இல்லாமல் மக்களால் வாங்க முடியவில்லை.
அதனால்தான், ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்டம்பர் 5 அதாவது நாளை வரை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள்: இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
"பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம்.
அறிவிப்பு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications