சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிக்கிழமைதோறும் ஆள் பிடிக்கும் வேலையை தவெக செய்து வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார். த.வெ.க.வில் ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் தூண்டிலில் புழுவை வைத்து மீனை பிடிப்பதை போன்றது என்றும், அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் வெற்றி, வசீகரத்தால் கிடைத்ததாகவும், ஆனால் ஆட்சியில் விவசாயம், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், விஜய் அரசின் செயல்பாடுகள் பல்வேறு துறைகளில் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது:-

RB Udhayakumar Attacks TVK Warns AIADMK Workers Cadres Like Fish With Bait Against Defections

வசீகரம் நிரந்தரமானது அல்ல

முதல்வர் விஜய் கட்சியை தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே மக்களின் ஆதரவை பெற்று 35 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் அந்த 35 சதவீத வாக்குகளை மட்டும் பார்க்காமல், அவருக்கு எதிராக வாக்களித்த 65 சதவீத வாக்காளர்களின் மனநிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். த.வெ.க.வில் சேருவதற்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள் என தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது.

ஆனால் கட்சித் தலைவர் விஜய்யை நேரில் சந்திப்பதே எளிதான விஷயமாக இல்லை. ஜனநாயக அரசியலில் இதுபோன்ற நிலைமை மிகவும் வருத்தத்துக்குரியது. விஜய் பெற்ற வெற்றியை சினிமா கவர்ச்சி என்று சொல்வதா, வசீகரம் என்று சொல்வதா என்பது வேறு விஷயம். ஆனால் அந்த கவர்ச்சியும் வசீகரமும் நிரந்தரமானது அல்ல என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது

வசீகரத்தின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், விவசாயிகளின் பயிர்க்கடன் பிரச்சினை, தடையில்லா மின்சாரம் வழங்குவது, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போதைய அரசு தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மீன் பிடிப்பது போல

சிலரை நீண்ட காலம் ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம். ஆனால் அனைவரையும் எல்லா காலங்களிலும் ஏமாற்ற முடியாது. இதை தற்போதைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், சனிக்கிழமை தோறும் ஆள் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அ.தி.மு.க. தொண்டர்கள் இதுபோன்ற முயற்சிகளிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தூண்டிலில் புழுவை வைத்து மீனை பிடிப்பது போல ஆட்களை கவர்ந்து அழைக்கிறார்கள். அது மீனின் நலனுக்காக அல்ல, அதை பயன்படுத்திக்கொள்வதற்காகத்தான் என்பதை தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அ.தி.மு.க.வின் விசுவாசமான தொண்டர்கள் இதனை உணர்ந்தால், ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும் இந்த ஆள் பிடிக்கும் அரசியல் தமிழகத்தில் முடிவுக்கு வரும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+