ரெப்போ ரேட் சரிகிறது.. வீட்டு லோன், கார், பைக் லோனுக்கு EMI குறையுது.. வருகிறது அசத்தலான நியூஸ்!
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் இந்த வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது நவம்பர் அல்லது டிசம்பரில்தான் இந்த அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த நான்காவது குறைப்பு நிகழ்கிறது. அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆர்பிஐ கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்தச் செயலைத் தொடர்ந்து, பல வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி குறையும் வாய்ப்புள்ளது.
SBI அறிக்கை
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாலும், பணவீக்கம் மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பாலும், வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன என SBI அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நான்காவது முறையாக வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மூன்று முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில், சிறிது கால இடைவெளிக்குப் பிறகு இந்த நான்காவது குறைப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வீட்டுக் கடன் மற்றும் சிறு வணிகக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித மாற்றம்
கடந்த சில வாரங்களுக்கு முன், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாக நிர்ணயித்தது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் முதல் இதுவரை மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகள் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்த போதிலும், பல வங்கிகள் இன்னும் இந்த பலனை முழுமையாக வாடிக்கையாளர்களுக்குச் செலுத்தவில்லை.
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே வங்கிகளை அணுகி, வட்டி குறைப்பின் பலனைப் பெற வேண்டும். இல்லையெனில், கடன் சுமை குறையாமல் போகலாம். வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், மாதாந்திர தவணை (EMI) அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் எதைக் குறைக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களே தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
கடன் வாங்குபவர்களின் விருப்பம் இல்லாமல், வங்கிகள் தானாக முடிவெடுக்கக் கூடாது. HDFC போன்ற சில வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தைக் கேட்டு செயல்படுகின்றன. ஆனால், சில வங்கிகள் இன்னும் இந்தத் தெரிவை வழங்கவில்லை. உங்கள் வங்கி EMIயையோ அல்லது கடன் செலுத்தும் காலத்தையோ குறைக்காத பட்சத்தில், உங்கள் கிளையில் ஒரு கடிதம் எழுதி, உங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறைக்கக் கோரலாம்.
ரெப்போ விகித மாற்றம்
மொத்தத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த தொடர் ரெப்போ விகிதக் குறைப்பு, வீடு மற்றும் சிறு வணிகக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். வங்கிகள் இந்த பலனை முழுமையாகச் செயல்படுத்தும்போது, மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் சுமை கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது.
25 அடிப்படைப் புள்ளிகள் (BPS) ரெப்போ விகிதக் குறைப்பு செய்யப்படுவது ரிசர்வ் வங்கிக்குச் சிறந்த வழி என SBI அறிக்கை பரிந்துரைக்கிறது. இதனால், அடுத்த மாத நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி 25 BPS ரெப்போ விகிதக் குறைப்பை அறிவிக்கலாம். 2025 ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற்ற முந்தைய கூட்டத்தில், ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக 25 BPS குறைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications