Jacto geo: ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்ட பின்னணி இதுதான்!
Recommended Video

சென்னை: அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் 9 நாட்களுக்கு பிறகு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், பள்ளிகளில் கல்வி பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரில்லை
போராட்ட குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பு புறந்தள்ளி விட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாதவையாக உள்ளன என்பதால் இதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துவிட்டார்.

அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
மேலும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை, போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகளும் அரசுத் தரப்பிலிருந்து பாய்ந்தன. இந்த நிலையில் போராட்டம் நடத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது.

பிசுபிசுத்த அரசு ஊழியர் போராட்டம்
நேற்றைய தினம் 95 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. சென்னையில் சுமார் 100 சதவீதம் ஆசிரியர்களும் பணிக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
|
ஜாக்டோ ஜியோவினருக்கு ஸ்டாலின் கோரிக்கை
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜாக்டோ ஜியோ ஊழியர்கள், திமுக ஆட்சி மலரும் வரை பொறுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதற்கு முன்பாக தாங்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு மாணவர்கள் நலனுக்காக மீண்டும் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

போராட்டம் வாபஸ் பெற இரு காரணங்கள்
இந்த நிலையில்தான் இன்று மாலை ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்து ஒரு பக்கம் என்றால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை மற்றொரு பக்கம் என இந்த போராட்டத்தை கைவிடுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications