Jacto geo: ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்ட பின்னணி இதுதான்!
Recommended Video

சென்னை: அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் 9 நாட்களுக்கு பிறகு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், பள்ளிகளில் கல்வி பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரில்லை
போராட்ட குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பு புறந்தள்ளி விட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாதவையாக உள்ளன என்பதால் இதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துவிட்டார்.

அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
மேலும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை, போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகளும் அரசுத் தரப்பிலிருந்து பாய்ந்தன. இந்த நிலையில் போராட்டம் நடத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது.

பிசுபிசுத்த அரசு ஊழியர் போராட்டம்
நேற்றைய தினம் 95 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. சென்னையில் சுமார் 100 சதவீதம் ஆசிரியர்களும் பணிக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
|
ஜாக்டோ ஜியோவினருக்கு ஸ்டாலின் கோரிக்கை
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜாக்டோ ஜியோ ஊழியர்கள், திமுக ஆட்சி மலரும் வரை பொறுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதற்கு முன்பாக தாங்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு மாணவர்கள் நலனுக்காக மீண்டும் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

போராட்டம் வாபஸ் பெற இரு காரணங்கள்
இந்த நிலையில்தான் இன்று மாலை ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்து ஒரு பக்கம் என்றால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை மற்றொரு பக்கம் என இந்த போராட்டத்தை கைவிடுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications